Header Ads



முஸ்லிம்கள் அச்­ச­ம­டைந்­து­விட்­டனர் - ராஜித

இலங்­கையை சேர்ந்த  32 பேர்  ஐ.எஸ். அமைப்பில் இருப்­ப­தாக எவ்­வி­த­மான புல­னாய்வு அறிக்­கையும் பாது­காப்புப் பேர­வை­யினால் வெளியி­டப்­ப­ட­வில்லை. இது முற்­றிலும் தவ­றான தக­வ­லாகும் என்­பதை பொறுப்புடன் கூறு­கின்றேன். அதன்­படி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ முன்­வைத்த  தக­வ­ லா­னது அவ­ரு­டைய தனிப்­பட்டதக­வ­லாகும். அது அர­சாங்­கத்தின் உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு அல்ல என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான  ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.  

இந்த விட­யத்தில் நாட்டில் முஸ்லிம் மக்கள் அச்­ச­ம­டைந்­து விட்­டனர். அவர்­களை தெளி­வு­ப­டுத்த வேண்­டி­யது  எமது பொறுப்­பாகும். அதா­வது முஸ்லிம் மக்கள் மிகவும் மிதவாத சிந்­த­னை­களைக்கொண்ட மக்­க­ளாவர்.  அவர்கள் ஒரு­போதும்  இவ்­வா­றான செயற்­பா­டு­களை அனு­ம­திக்க மாட்­டார்கள் எனவும் அவர் குறிப்­பிட்டார்.  

பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வுகளை  அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே   அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.  அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

இலங்­கை­யர்கள் 32 பேர்  ஐ.எஸ். அமைப்பில் அங்கம் வகிப்­ப­தாக   நீதி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில்  தெரி­வித்த கருத்­தா­னது அர­சாங்­கத்தின்  கருத்­தல்ல. அது அவ­ரது  தனிப்­பட்ட கருத்­தாகும்.  அவ்­வாறு  இலங்­கையை சேர்ந்த 32 பேர்  ஐ.எஸ். அமைப்பில்  இருப்­ப­தாக எவ்­வி­த­மான புல­னாய்வு அறிக்­கையும் பாது­காப்பு பேர­வை­யினால் வெ ளியி­டப்­ப­ட­வில்லை. 

இது முற்­றிலும்  தவ­றான தக­வ­லாகும் என்­பதை  பாது­காப்பு பேரவைக் கூட்­டத்தில்  கலந்து கொண்­டவன் என்ற அடிப்­ப­டையில் பொறுப்­புடன் கூறு­கின்றேன். அதன்­படி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ முன்­வைத்த கருத்­தா­னது அவ­ரு­டைய தனிப்­பட்ட கருத்­தாகும். 

இது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விசே­ட­மாக கவனம் செலுத்தி  பாது­காப்புத் தரப்­பிடம் தவல்­களைப் பெற்றார்.  அதன்­படி அவ்­வாறு  எந்­த­வொரு இலங்கை உறுப்­பி­னரும் ஐ.எஸ். அமைப்பில் இல்லை என்­பதை  பாது­காப்புப் பிரிவும் உள­வுப்­பி­ரிவும் உறுதி செய்­துள்­ளது. 

ஆரம்­பத்தில் இலங்­கை­யி­லி­ருந்து சிலர்  ஐ.எஸ். அமைப்பில் இணைந்­த­தாக கூறப்­பட்­டது. ஆனால்  அது  இலங்­கையை விட்டுச் சென்ற  ஒரு சில­ரா­லேயே முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தா­கவே  கூறப்­பட்­டது.  எவ்­வா­றெ­னினும் தற்­போது  எவரும்  இந்த அமைப்பில்  இலங்­கை­யி­லி­ருந்து  சென்று  இணைந்­து­கொள்­ள­வில்லை.  

இந்த விட­யத்தில் நாட்டில் முஸ்லிம் மக்கள் அச்­ச­ம­டைந்­து­விட்­டனர்.  அவர்­களை தெளி­வு­ப­டுத்த வேண்­டி­யது  எமது பொறுப்­பாகும்.  அதா­வது முஸ்லிம் மக்கள் மிகவும் நவீன சிந்­த­னை­களைக் கொண்ட மக்­க­ளாவர்.  அவர்கள்  ஒரு­போதும்   இவ்­வா­றான செயற்­பா­டு­களை  அனு­ம­திக்க மாட்­டார்கள்.  

முஸ்லிம் இளை­ஞர்கள் ஏதா­வது  கடும்­போக்­கு­வா­த­மாக செயற்­பட்டால்   முஸ்லிம் பெரி­யோர்கள் எங்­களை அழைத்து விட­யத்தை கூறி­வி­டு­வார்கள். காரணம் அவ்­வா­றான  சிறு­சிறு விட­யங்­களால் பாதிப்பு பெரி­தாகும் என்று அவர்­க­ளுக்குத் தெரியும்.  அது­மட்­டு­மன்றி நானும்  முஸ்லிம் மக்­க­ளுடன் நெருங்கிப் பழ­கு­கின்றேன்.  கிழக்கு மாகாணம்,  கொழும்பு,  பேரு­வளை,  அனைத்துப் பகு­தி­க­ளி­லி­ருந்தும் முஸ்லிம் மக்­களை எனக்கு  நன்­றாகத் தெரியும்.   

கேள்வி:- அப்­ப­டி­யாயின் நீதி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ பாரா­ளு­மன்­றத்தில் ஏன்   இவ்­வா­றா­ன­தொரு தக­வலை  வெளி­யிட்டார்.?

பதில் அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ   தனக்கு கிடைத்த தக­வலை கூறி­யி­ருக்­கின்றார் போல் தெரி­கின்­றது.  ஆனால் அது  அர­சாங்­கத்தின் உத்­தி­யோ­கப்­பூர்வ தகவல் அல்ல.  உத்­தி­யோ­கப்­பூர்வ தக­வ­லையே நான் இப்­போது உங்­க­ளுக்கு கூறு­கின்றேன்.  இந்த விட­யத்தை  தெளி­வு­ப­டுத்­த­வேண்­டிய பொறுப்பு இருக்­கின்­றது. 

கேள்வி: ஒரு­சில  வெளி­நாட்டு முஸ்­லிம்கள்   இலங்­கையில்  அரபு மொழியில் தீவி­ர­வாத பிர­சாரம் செய்­வ­தா­கவும் அமைச்சர் கூறி­யி­ருந்தார். இது தொடர்பில் 

பதில்:-  அந்த விட­யத்­தையும் நாங்கள் பாது­காப்புத் தரப்­பி­னரைக் கொண்டு தேடிப்­பார்த்தோம். அவர்கள் அவ்­வாறு எதுவும் தீவி­ர­வாதப் பிர­சாரம் செய்­ய­வில்லை. தமது மத விட­யங்­களை அர­பு­மொ­ழியில் முன்­னெ­டுக்­கின்­றனர்.  இந்த இடத்தில் அர­பு­மொ­ழியில் பேசு­வது மட்­டுமே புதிய விட­ய­மாகும். மாறாக  வேறு ஒன்றும் இல்லை. 

இந்­த­வி­ட­யத்தில் ஜனா­தி­ப­தியும் நானும் விசே­ட­மாக கவனம்  எடுத்தோம்.  பாது­காப்பு தரப்­பி­ன­ரு­டனும்  உள­வுத்­த­ரப்­பி­ன­ரு­டனும் கலந்­து­ரை­யாடி  விட­யத்தை தெளி­வு­ப­டுத்திக் கொண்டோம்.  அந்­த­வ­கையில்  அவ்­வாறு  எவரும்  ஐ.எஸ். அமைப்பில் இல்­லை­யென  உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.  

கேள்வி:- அப்­ப­டி­யாயின் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ கூறி­யது பொய்யா?

பதில்:  அது எனக்குத் தெரி­யாது.  ஆனால்  ஐ.எஸ். அமைப்பு இலங்­கை­யி­லி­ருந்து எவரும் இல்லை என்­பது உறு­தி­யாகும்.  இது தொடர்பில் நான் விஜ­ய­தாஸ ராஜ­ப­க்ஷ­வு­டனும் பேச்சு நடத்­தினேன். தனக்கு  கிடைத்த தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­ய­தாக அவர் கூறினார். 

கேள்வி: நீதி அமைச்­சரின் இந்தக் கூற்­றினால்  நாட்டின் முஸ்லிம் சமூகம் மத்­தியில்  ஒரு சல­ச­லப்பு ஏற்­பட்­டதே?

பதில்: ஆம் முஸ்லிம் சமூகம் மத்­தியில் ஒரு சல­ச­லப்பும் அச்ச நிலை­மையும் ஏற்­பட்­டது. இது­வரை 30க்கும் மேற்­பட்ட முஸ்லிம் அமைப்­புக்கள் என்­னுடன் பேச்­சு­வார்த்தை நடத்த நேரம் கோரி­யுள்­ளன.  முஸ்லிம் மக்கள் எந்­த­வ­கை­யிலும் அச்­ச­ம­டையத் தேவை­யில்லை.  நாங்கள்  தேவை­யான பாது­காப்பை வழங்­குவோம்.  எக்­கா­ரணம் கொண்டும் பாது­காப்பு இன்­மை­யாக   உங்­களை உண­ர­வேண்டாம்.  

கேள்வி: முஸ்லிம் அமைப்பை சேர்ந்த ஒருவர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளாரே?

பதில்: அவர்  முன்­னைய ஆட்­சியில் உள­வா­ளி­யா­கவும்  கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின்  நெருங்­கிய சகா­வா­கவும் செயற்­பட்­டமை எமக்குத் தெரியும்.  

இந்த இடத்தில் ஒரு­வி­த­மான சதி இடம்­பெ­று­வதை   நாங்கள் உண­ரு­கின்றோம். கடந்த  ஜனா­தி­பதி தேர்­தலில் 90 வீத­மான  முஸ்லிம் மக்கள் எமக்கு வாக்­க­ளித்­தனர். எதிர்­கா­லத்தில் முஸ்லிம் மக்கள் மத்­தியில் அச்­சத்தை ஏற்­ப­டுத்தி அந்த மக்­களை வாக்­க­ளிப்­பி­லி­ருந்து பகிஷ்­க­ரிப்பு செய்­வ­தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது. 

அதே­போன்று வடக்கில் ஆவா குழுவை நிறுவி அங்கும் மக்­களை   வாக்­க­ளிக்­க­வி­டாமல்  தடுப்­ப­தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது. இதன்­மூலம்  முஸ்லிம் தமிழ் மக்­களை வாக்­க­ளிக்­க­வி­டாமல்  பெரும்­பான்மை மக்­களின்  வாக்­குகள் மூலம் வெற்றிபெறுவதற்கு   ராஜபக்ஷ தரப்பினர் முயற்சிக்கின்றனர்.

கேள்வி:- அப்படியாயின் அந்த முயற்சிக்கு  அமைச்சர்  விஜயதாச ராஜபக்ஷ உறுதுணையாக செயற்படுகின்றாரா?

பதில்: கருத்து வெளியிட விரும்பவில்லை

கேள்வி: கோத்தபாய ராஜபக்ஷவிடம் தகவல் பெற்றுத்தான்  நீதி அமைச்சர் பாராளுமன்றத்தில் உரையாற்றியதாக கூறப்படுகின்றதே?

பதில்:  உண்மை என்றால் மகிழ்ச்சியடையலாம்.  

கேள்வி: நீங்கள் முஸ்லிம்களுடன் இணைந்து செயற்படுபவர் என்பதால்  இவ்வாறு  கூறுகிறீர்களா?

பதில்:  பாதுகாப்பு பேரவையில் வெளிப்படுத்தப்பட்ட உண்மையான தகவல்களை நான் உங்களுக்கு கூறுகின்றேன்.  என்ன நடந்தது என்று எனக்குத் தெரியும்.  

2 comments:

  1. Thawheed Jamaath have to justify their CID work about Muslims with Koththabaaya. (It does not mean that they should quote evidence from Quran or Hadeeths)

    ReplyDelete
  2. மாஷாஅள்ளாஹ்,
    ஒரு பொறுப்புவாய்ந்த அமைச்சர் என்ற வகையிலும் முஸ்லிம்களை சரியாகப் புரிந்து கொண்டவர் என்ற வகையிலும் நீங்கள் கூறிய கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்.
    ஆனால் இது அரசியலாகவும் வாக்குவங்கியைப் பாதுகாப்பதற்காகவும் மட்டுமே என இருந்துவிடப்கூடாது எனப் பிரார்த்திக்குன்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.