Header Ads



தயா கமகேயை நீக்குக - ஹரீஸ் போர்க்கொடி

அம்­பாறை மாவட்­டத்தில் சிறு­பான்மை தமிழ், முஸ்லிம் மக்­களின் நேச சக்­தி­யா­கவும், இன­வா­த­மற்ற அர­சியல் தலை­மை­யா­கவும் தன்னைக் காட்டிக் கொண்ட அமைச்சர் தயா கமகே மாணிக்­க­மடு புத்தர் சிலை நிறு­வப்­பட்ட விவ­கா­ரத்­துடன் சிறு­பான்மை மக்­களின் நம்­பிக்­கையை இழந்­து­விட்டார்

எனவே மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுத் தலைமைப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட வேண்டும் என விளை­யாட்­டுத்­துறை பிரதி அமைச்­சரும் முஸ்லிம் காங்­கிரஸ் பிர­தித்த தலை­வ­ரு­மான சட்­டத்­த­ரணி எச்.எம்.எம். ஹரீஸ் வலி­யு­றுத்­தினார். கல்­மு­னை­யி­லுள்ள அவ­ரது அலு­வ­ல­கத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்­றின்­போது மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலையில் அத்­து­மீறி புத்தர் சிலை நிறு­வப்­பட்­டுள்­ளமை தொடர்­பிலும், இதன் பின்­ன­ணியில் இருந்­த­தாக கூறப்­படும் ஆரம்ப கைத்­தொழில் அமைச்­சரும், அம்­பாறை மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுத் தலை­வ­ரு­மான தயா­க­மகே இந்த விடயம் தொடர்பில் வெளி­யிட்­டுள்ள கருத்து குறித்தும் கேள்வி எழுப்­பப்­பட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். பிரதி அமைச்சர் சட்­டத்­த­ரணி ஹரீஸ் மேலும் கருத்து வெளி­யி­டு­கையில்,

இன்­றைய நல்­லாட்சி அரசு மத, கலா­சார உரி­மைகள் மற்றும் பாரம்­ப­ரிய பிர­தே­சங்­களை மதித்து இனங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்பும் பாதையில் பய­ணித்து வரு­கின்­றது.
எனினும் பௌத்த மக்­களே வாழாத அம்­பாறை மாவட்­டத்தின் இறக்­காமம் பிர­தேச செய­லகப் பிரி­வி­லுள்ள மாணிக்க மடு தமிழ் கிராம மாயக்­கல்லி மலையில் புத்தர் சிலை நிறு­வப்­பட்ட விவ­காரம் சமூ­கங்­க­ளுக்­கி­டையே விரி­சலை ஏற்­ப­டுத்தி அரசின் நன்­னோக்கை சித­ற­டிக்கும் வகையில் அமைந்­துள்­ளது.
 அதிலும் நல்­லாட்சி அரசின் அமைச்சர் ஒரு­வரே இச்­சிலை நிறு­வுதல் விவ­கா­ரத்தை கையி­லெ­டுத்­தி­ருப்­பது அதிர்ச்­சி­யையும் வேத­னை­யையும் தரு­வ­தாக அமைந்­துள்­ளது.
 அம்­பாறை மாவட்­டத்தின் இன சௌஜன்­யத்­துடன் வாழ்ந்­து­வரும் சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­டையே பாரிய பிள­வையும், மனக்­க­சப்­பையும் ஏற்­ப­டுத்தும் இத்­த­கைய செயலில் அவர் இறங்­கி­யி­ருப்­பது கண்­டிக்­கத்­தக்க விட­ய­மாகும்.
 தயா­க­மகே கடந்த பொதுத் தேர்­த­லின்­போது தன்னை இன­வா­த­மற்ற, சிறு­பான்மை தமிழ், முஸ்லிம் மக்­களின் நேச சக்­தி­யாகக் காட்­டிக்­கொண்டு வாக்கு வேட்­டைக்­காக ஆலா­வாய்ப்­ப­றந்து திரிந்­தவர்.
 இவர் மீது நம்­பிக்கை கொண்ட முப்­ப­தா­யி­ரத்­துக்கு மேற்­பட்ட சிறு­பான்மை மக்கள் வாக்­க­ளித்­தி­ருந்­தனர். மூவின மக்­க­ளி­டை­யேயும் ஓர் உறவுப் பால­மா­கவே அமைச்சர் தயா­க­ம­கேவை அம்­பாறை மாவட்ட மக்கள் கரு­தினர்.  
இவ்­வாறு நம்­பிக்கை கொண்ட மக்­க­ளுக்கு இன்று பேர­தி­ர்ச்சியும், அச்­சமும் ஏற்­பட்டு கொண்­டி­ருந்த நம்­பிக்கை தவிடு பொடி­யா­கி­யுள்­ளது.
அம்­பாறை மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்டம், அம்­பாறை கச்­சேரி கேட்போர் கூடத்தில் சில தினங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்­ற­போது ஓருங்­கி­ணைப்புக் குழுவின் தலை­வ­ரான அமைச்சர் தயா­க­மகே,  “இந்த நாட்டில் புத்தர் சிலைகள் வைப்­பதை எவ­ராலும் தடுக்க முடி­யாது. புத்தர் சிலை வைப்­பது நல்­லாட்­சியைப் பாதிக்­கு­மென்று எவ­ரா­வது கரு­தினால், எனது அமைச்சுப் பத­வியைக் கூடத் துறக்க நான் தயா­ரா­க­வுள்ளேன்” எனக் கூறி­யுள்ளார்.  
தீக­வாபி விகா­ரைக்குச் சொந்­த­மான காணிகள் சுற்­றி­வர சுமார் 12000 ஏக்கர் இருப்­ப­தா­கவும், தீக­வா­பியின் வர­லாறு பற்றிக் கூறும் புரா­தன நூலில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார்.
இதனை அவ­தா­னிக்­கின்­ற­போது கல்­முனை முதல் பொத்­துவில் வரை­யுள்ள காணிகள் தீக­வாபி விகா­ரைக்கே சொந்­த­மா­கின்­றன என்றும் தயா கமகே தெரி­வித்­துள்ளார்.
அமைச்­ச­ரது இத்­த­கைய கூற்­றுக்­களும், செயற்­பாடும் அவ­ரது முகத்­தி­ரையைக் கிழித்து உண்­மை­யான சுய­ரூ­பத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. இதன் மூலம் சிறு­பான்மை மக்­களின் நம்­பிக்­கையை அவர் இன்று இழந்­துள்ளார்.
அதே­வேளை முஸ்லிம் அர­சியல் பிர­தி­நி­தி­க­ளா­கிய எம்­மையும் அவ­ரைப்­போன்று தீவிர கடும்­போக்­கா­ளர்­க­ளாக மாற்றும் சூழ­லையும் அவர் உரு­வாக்­கி­யுள்ளார். ஆனாலும் நாட்டின் சூழல், முஸ்லிம் சமூ­கத்தின் பாது­காப்பு, எதிர்கால நலன் கருதி நிதானமாக  செயற்படவேண்டிய கட்டாயத்தில் நாமுள்ளோம்.
இந்த நிலையில் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை இழந்துள்ள அமைச்சர் தயாகமகே பதவி வகிக்கும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆவன செய்யவேண்டும்.
நல்லாட்சியின் சகல சமூகங்களுக்கும் சமத்துவம், நல்லிணக்கமெனும் கருப்பொருள் உறுதிப்படுத்தப்பட வழிவகுக்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.

11 comments:

  1. If Daya Gamage was not removed, You SLMC man as a protest can you resign your post?

    ReplyDelete
  2. போர்க்கொடி எங்க வீட்டுக்குள்ள இருந்தா? பாராளுமன்றில் போய் பேசுங்க ஹன்சாட்டில்.

    சிலையை எந்த கொம்பனாலும் அகற்ற முடியாது என்று மன்சூர் தானே முதலில் சொன்னாரு. ஆப்புறம்தானே தயா கூடடம் நடந்தது.

    மகிந்தாவோட இருக்கும்போது ரணிலை பத்தி இப்படித்தான் மோசமா டீவில ஒருநாள் பேசினீங்க என்று ஜாபகம்....

    ஆனால் இன்று அதே ரணிலோட அமைச்சு பதவியுடன் இருக்கீங்க சார்.

    யாரு யாருக்கு நடவடிக்கை எடுக்குற?

    ReplyDelete
  3. Before we remove Daya Gamage we have to remove Manzoor. He is the main culprit and betrayed the Muslim community. For the existance of SLMC this has to be done without any further delay.

    ReplyDelete
  4. " என்னமோ செய்துகிட்டு இருந்தானாம் வந்த பஸ் போய்ட்டாம், எழும்பி பார்த்தானாம் (அப்பாதையால் கடைசியாக வருகின்ற) லொறியும் போய்ட்டாம்." என்கிற கதை மாதிரித்தான் இருக்கு நம்முட தும்பிர கதை.

    போன பஸ்சிக்கு பின்னால் கைகாட்டியே ஒண்டும் ஆகிறதில்லை.

    ஆனால் இந்த எம்பி அந்த பஸ்சிக்கு பின்னால் போன லொறிக்கி கைகாட்டப்போறாராம்.

    அய்யோ...............பாவம்...........

    ReplyDelete
  5. நீங்கள் கல்முனையில் பேசுவதை விட பாராளுமன்றதில் பேசுங்கள்

    ReplyDelete
  6. இந்த நாலு சுவருக்குல் இரண்டு மூன்று மைக் முன்னால் அறிக்கை விடுவதால் யாரை முட்டாளாக்க முயற்சிக்கிறார். அரசை விட்டு வெளியே வரப்போவதாக பலமுறை அறிக்கை விட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அரசை விட்டு வெளியே வர முடியுமா அல்லது நல்லாட்சியை ஏற்படுத்தியவர்கள் என மீண்டும் மீண்டும் அறிக்கை விட்டு சலுகைக்காக சமுதாயத்தை காட்டிக் கொடுக்க போகிறாரா.

    ReplyDelete
  7. They are leaders of the Muslim community. It is very shame. They can't open the mouth in appropriate places.

    ReplyDelete
  8. கல்முனை தமிழரிடம் ரௌடீசம் காட்டும் ஹரீஸ் தயாவிடம் பம்புகிறார்உங்க வீராப்பு எல்லாம் இம்புட்டு தான்.

    ReplyDelete
  9. அறிக்கை விடுவதில் உலமா கட்சியை மிஞ்சிடுவார் போல் இருக்கிறது

    ReplyDelete
  10. இதற்க ொமன்ட் பண்ணுவதற்கு கூட மனசு இல்லை
    ஒண்டுக்கும் உதவாத நல்ல் மனிதர்கள்.
    அல்லாஹ் எமக்கு உதவி செய்வான் இன்ஸா அல்லாஹ

    ReplyDelete
  11. All the Muslim parliamentarian must learn Islam

    ReplyDelete

Powered by Blogger.