Header Ads



பொதுபல சேனா, ஜம்மியத்துல் உலமாக்கு அனுப்பிய கடிதம் இதுதான்..!

-விடிவெள்ளி-

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை ஏனைய மதங்­களை அவ­ம­திப்­பது இஸ்லாம் மதத்­துக்கு எதி­ரா­ன­தாகும்’ என்று இஸ்லாம் மதத்­தைப்­பற்றி பொய்­களைக் சோடித்து ஊடக அறிக்­கை­யொன்று வெளி­யிட்­டுள்­ளது.

இவ்­வாறு புனித அல்­குர்­ஆனில் எந்த இடத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது என்­பதை உலமா சபை தெளி­வு ­ப­டுத்த வேண்டும் என பொது­ப­ல­சேனா அமைப்பு உல­மா­ச­பை­யிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது. 

பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சா­ர­தேரர் உல­மா­ச­பையின் தலை­வ­ருக்கு அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்­திலே இக்­கோ­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ‘ஏனைய மதங்­களை நிந்­திப்­பதும் அவ­ம­திப்­பதும் இஸ்­லாத்தின் போத­னை­க­ளுக்கு மாறா­ன­தாகும் இஸ்லாம் சமா­தானம் சக­வாழ்­வுக்­கான மத­மாகும். ஏனைய மத­ச­கோ­த­ரர்­க­ளது மத நட­வ­டிக்­கை­க­ளுக்கு மதிப்­ப­ளிக்க வேண்டும் என்று இஸ்லாம் போதித்­துள்­ளது என உலமா சபை ஊடக அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்­ளது. 


ஆனால் பிரச்­சி­னை­க­ளுக்கு கார­ண­மாக தௌஹீத் ஜமா அத்தின் பெயரை உலமா சபை குறிப்­பி­டு­வ­தி­லி­ருந்தும் தவிர்த்துக் கொண்­டுள்­ளது. மேலும் புனித குர்­ஆ­னுக்கு அவ­ம­திப்பு ஏற்­படும் வகையில் எந்த நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­ப­டக்­கூ­டாது. அவ்­வாறு செயற்­படும் நபர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுத்து தண்­டனை வழங்­கு­மாறும் அர­சாங்­கத்தை கேட்டுக் கொண்­டுள்­ளது. இஸ்­லா­மிய பூனை இந்த இடத்­திலே பையி­லி­ருந்து வெளியே பாய்­கி­றது. 

ஒரு­போதும் குர்­ஆனைப் பற்றிப் பேசக்­கூ­டாது. அவ்­வாறு பேசு­வ­தென்றால் அது குர்­ஆனை அவ­ம­திப்­ப­தாகும் என்று உலமா சபையின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பௌத்­தர்கள் என்ற வகையில் எந்­தவோர் மதத்­தையும் அவ­ம­தித்துப் பேசு­வதை நாம் மறுக்­கிறோம். நிரா­க­ரிக்­கிறோம் அத்­தோடு இந்தக் கொள்­கையை நாமும் கடைப்­பி­டிக்­கிறோம். ஒன்றைக் கூறி வேறொன்றைக் கடைப்­பி­டிப்­பது இஸ்­லாத்தின் போத­னையும் இஸ்­லா­மிய சம்­பி­ர­தா­யங்­க­ளு­மாகும்.

ஆனால் இது பௌத்த சம்­பி­ர­தா­யங்­க­ளுக்கும் அப்­பாற்­பட்­ட­தாகும். 

குர்­ஆனின் போத­னை­களை அப்­ப­டியே எமது சமூ­கத்­துக்குள் மறைத்து வைத்துக் கொண்­டி­ருப்­ப­தற்கு இஸ்­லாத்­துக்கு இட­ம­ளித்­தி­ருப்­ப­தா­னது ஆபத்­தா­ன­தாகும். இதன் மூலம் இந்­நாட்­டுக்கு ஏற்­படப் போகும் ஆபத்­தினைத் தடுப்­ப­தற்­கான கடைசி சந்­தர்ப்பம் இல்­லாமற் போய்­விடும். அதனால் குர்­ஆனின்  போத­னை­களை எமது சமூ­கத்­துக்குள் மறைத்து வைத்துக் கொண்­டி­ருக்க முடி­யாது. 

எமது நாட்டில் இட­ம­ளிக்­கப்­பட்­டுள்ள எந்த மத்­தி­னதும் போத­னைகள் மற்றும் கோட்­பா­டுகள் என்ன என்­பதை எமது சமூகம் அறிந்து கொள்ள வேண்டும். இவ்­வாறு அறிந்து கொள்­வ­தற்கு பௌத்­தர்­க­ளை போன்றே இந்­நாட்டில் வாழும் அனைத்து இனங்­க­ளுக்கும் உரிமை உண்டு. அதனால் இஸ்­லாத்தின் போத­னைகள் மற்றும் கொள்­கைகள் என்ன என்­பதை எமது சமூ­கத்தின் மத்­தியில் பகி­ரங்­க­மாகப் பேசு­வ­தற்கு சக­ல­ருக்கும் உரி­மை­யுண்டு அவ்­வாறு பேசு­வது ஒரு போதும் இஸ்­லாத்­ததை அவ­ம­திப்­ப­தாக அமை­யாது. இவ்­வா­றான பிரச்­சி­னை­களை பகி­ரங்கக் கலந்­து­ரை­யா­டல்கள் மூலமே தீர்த்துக் கொள்ள முடியும். 

ஐ.எஸ், ஜிஹாத் மற்றும் அனைத்து ஜிஹாத் அமைப்­பு­களும் இஸ்­லா­மிய போத­னை­க­ளின்­படி கொலைகள் புரிந்து பாரிய அழி­வு­களை ஏற்­ப­டுத்தி இவ்­வு­லகை அல்­லாஹ்வின் பாதை­யான இஸ்­லா­மிய நர­க­மாக மாற்­று­வ­தற்கு முயற்­சிக்­கின்­றன. இந்­நாட்டில் செயற்­பட்­டு­வரும் தௌஹீத், ஜமா அத், ஜிஹாத் அமைப்பு என்­பன ஓநாய்­களின் குட்­டி­களே அன்றி ஆட்டுக் குட்­டிகள் அல்ல என்­பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அவ்­வா­றெனில் ஜம்­இய்­யதுல் உலமா போன்ற அமைப்­பு­களின் நோக்கம் மற்றும் அவற்றின் இஸ்­லா­மிய பொறுப்­புகள் என்ன? ஜம்­இய்­யத்துல் உலமா சபை போன்ற அமைப்­புகள் இஸ்­லா­மிய போத­னை­க­ளுக்­கி­ணங்­கவே இயங்கி வரு­கின்­றன. அவற்றின் இலக்கும் அதுவே. 

ஐ.எஸ். என்­றாலும் தௌஹீத்  ஜமாஅத் என்­றாலும் ஜம்­இய்­யத்துல் உலமா என்­றாலும் இவை அனைத்தும் குர்­ஆனின் போத­னை­க­ளையே பின்­பற்றி செயற்­ப­டு­கின்­றன. இவை அனைத்தும் குர்­ஆனின் போத­னை­களை ஒரு எழுத்­துக்கும் மாற்­ற­மின்றி பின்­பற்­று­கின்­றன. நம்­பிக்கை வைத்­துள்­ளன. இந்த அமைப்­புகள் தாம் செயற்­படும் விதத்­திலே வேறு­பா­டுகள் உள்­ளன. 

முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யாக வாழும் இலங்கை போன்ற  நாடு­க­ளிலே ஜம்­இய்­யத்துல் உலமா போன்ற அமைப்­புகள் செயற்­ப­டு­கின்­றன. எமது நாட்டின் அதி­கா­ரத்தை இஸ்­லா­மி­ய­வா­திகள் கைப்­பற்றிக் கொள்­ளும்­வரை இஸ்­லாத்தின் மிலேச்­சத்­தனம், கொடூரம், அழி­வுக்­குட்­ப­டுத்தும் இஸ்­லா­மிய போத­னைகள் என்­ப­வற்றை சமூ­கத்­துக்குள் மறைத்து வைத்­தி­ருப்­ப­தையே இந்த ஜம்­இய்­யத்துல் உலமா சபை போன்ற அமைப்­புகள் கடைப்­பி­டிக்­கின்­றன. 

அந்த இலக்­கினை எய்தும் வரை பொய் மற்றும் ஏமாற்றும் வேலையைச் செய்­கி­றார்கள். 

உலமா சபை வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் அடங்­கி­யுள்­ள­வைகள் அனைத்தும் முழுப்­பொய்­யாகும். இஸ்­லா­மிய அமைப்­பு­களின் நட­வ­டிக்­கை­க­ளினால் இஸ்­லாத்தின் உண்­மை­யான முகம் வெளிப்­படும் போது இஸ்­லா­மிய அமைப்­புகள் எமது சமூ­கத்தை பிழை­யான பாதையில் திருப்­பு­வ­தற்­கா­கவும் இஸ்­லா­மிய அமைப்­பு­களைப் பாது­காப்­ப­தற்­கா­கவும் இவ்­வாறு செயற்­ப­டு­கின்­றன.

இதனால் ஏனைய மதங்­களை அவ­ம­திக்கும் வகையில் செயற்­ப­டு­வது இஸ்­லாத்­துக்கு எதி­ரா­னது என்றும் இஸ்லாம் சமா­தா­னத்­தையும் ஒற்­று­மை­யையும் சக­வாழ்­வி­னையும் போதிக்கும் மார்க்கம் எனவும் எமது சமூகத்தின் மத்தியில் அறிக்கை வெளியிட்டுள்ள ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் ஏனைய இஸ்லாம் அமைப்புகள் பின்வரும் இஸ்லாமிய போதனைகளை ஏற்றுக் கொள்கின்றனவா? இல்லையேல் மறுக்கின்றனவா ? எதிர்க்கின்றனவா ?-என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. 

பின்வரும் விடயங்களில் தெளிவுகள் கோரப்பட்டுள்ளன. சஹீஹ் அல் புகாரி 2546/ சஹீஹ் முஸ்லிம் 2605 இஸ்லாமிய ஷரீஆ சட்டம். 
குர்ஆன் அத்தியாயங்கள்

3:28, 48:29, 3:85, 8:39, 9:05, 2:190, 9:123, 48:19, 48:20, 9:14, 3:28 சஹீஹ் அல் புஹாரி 1:2: 24 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 comments:

  1. please reply to BBS immediately do not late if we late to response it will become another meanings or they are right so act fast

    ReplyDelete
  2. Same versus of the Holy quran were given as questions to a moulavi by his his bbs friend.He is trying for answers.

    ReplyDelete
  3. is is oru israelian security forces andu solra thane.awanga quran wasanatha molindhadhuku u-dhar andu adichu sollunga.appa welangum.muslimgala thane kolran andum sollunga.idha ututu muslimgaluku idhula sammandham irikira madiri thadamarawanam.

    ReplyDelete
  4. Our scholars need to give good answer to this kind of lier , falsehood followers,
    InshaAllah from the answer they will start to study Islam .

    ReplyDelete
  5. BBS என்பது ஒரு அறிவுரீதியான ஒரு ஒழுக்க நெறியுள்ள அமைப்பு கிடையாது. ஞான சாரர் என்பவர் ஒரு அறிவு ரீதியான பக்குவப்பட்ட ஒரு மதகுருவும் அல்ல. நமது பாஷையில் கூறுவதானால் "திண்டான் மான்சான்". எனவே இவர்களை போன்ற எத்தனையோ கிறுக்கர்களையும் குழப்பவாதிகளையும் சந்தித்த நமது மார்க்கமும் அதன் அறிஞர்களும் நிட்சயம் சாதுரியமாகவும் சாமார்தியமாகவும் இறைவனின் உதவியால் கையாள்வார்கள் என்றே நம்புகிறோம்.

    ReplyDelete
  6. Now , Gnanasara is trying to become the NEW SHEIKH OF
    ACJU ! Well , from another point of view ,not a bad
    development ! Is it not true that all Muslims love to
    see a "Muslim Srilanka" in our country ? What else all
    these organizations work for ? Quite Openly !Is it OK
    or not OK with the rest of the country to try it ?
    Of course we have a RIGHT for that in our democracy !
    But again ,there is a very serious question we don't
    ask ourselves . How much do we Muslims know about
    Islam and truly believe in it and honour it so that
    the rest of the world can join us ? BBS blames us
    that we help converts with funds and other means.
    Don't we know that Kalifa Umar stopped rewarding
    new converts saying that it is not necessary now ?
    And above all , can we achieve this without hurting
    the guardians of Buddhism in our country who are
    Monks like GNANASARA ? To do this,don't we have to
    say "we are better than them ?" Is that not asking
    for trouble ?

    ReplyDelete
  7. Dear Brothers Do not only answer for what they have asked, since they are will take above hadees and Quranic aya to put blame on Islam and Muslims, since they only will look at the Textual understanding.

    So they should be explained about the reason behind the Hadees and Aya first and also You may bring the Aya and Hadees in which Islam promotes the relation between Muslims with Kuffar with in day to day life.

    May Allah Bless them with Guidance hearing reason and explanation behind the Above Aya and Hadees.

    ReplyDelete

Powered by Blogger.