Header Ads



'முத்தலாக்' பற்றி கருத்துக்களை தெரிவித்த, குஷ்புவை கண்டிக்க வேண்டும் - நக்மா

தமிழக மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலர் நக்மா குஷ்புவுக்கு கோபமாக திட்டியுள்ளார்.

பொது சிவில் சட்டம் குறித்து கருத்து சொல்ல, குஷ்புவுக்கு எந்த அருகதையும் கிடையாது. முஸ்லிமான அவர் சினிமாவில் பொட்டு வைத்து நடிக்கலாம் தவறில்லை. ஆனால், நிஜ வாழ்க்கையில் ஏன் பொட்டு வைக்கிறார். கேட்டால், இந்து மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதாகக் கூறுவார்.

அப்படியெனில், முஸ்லிம் ஷரியத் சட்டம் பற்றி இவர் ஏன் கருத்து கூற வேண்டும். 'முத்தலாக்' பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் நிலைப்பாட்டிற்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் குஷ்புவுக்கு மாவட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

காலையில், கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வாராம், மாலையில் நடக்கும் மகளிர் காங்கிரஸ் கூட்டத்திற்கு வர மாட்டாராம். குஷ்புவின் நடவடிக்கைகள் குறித்து, கட்சி மேலிடத்தில் புகார் தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

3 comments:

  1. குஷ்புவை முஸ்லிம் என்று நம்பிட்டாங்க போல.

    ReplyDelete
  2. குஷ்பு நக்மா இருவரும் முஸ்லிமாக பிறந்து குஷ்பு இந்துவாக வாழ்கிறார். நக்மா கிரிஸ்தவராக மதம்மாறினார்.

    ReplyDelete
    Replies
    1. இரண்டுமே உலக இலாபத்திற்காக.... nothing to worry .

      Delete

Powered by Blogger.