Header Ads



ஜனாதிபதியை குறை கூறாதீர்கள்..!

அரச நிறுவனம் ஒன்றுக்கு நியமிக்கப்பட்ட நபரால் நடந்த தவறு காரணமாக நாட்டின் தலைவர் மீது குறைக்கூறுவது நியாயமானதல்ல என ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இப்படியான சிக்கல் காரணமாக தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திற்கும் கெட்டப்பெயர் ஏற்படுகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதுளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சம்பந்தப்பட்ட மோசடியாளர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுப்பார் என ஊவா முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.