Header Ads



பொதுபல சேனாவிடம், விளக்கம் கோரவுள்ளோம் - ரிஸ்வி முப்தி

பொது­ப­ல­சேனா அமைப்பு அகில  இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கு அனுப்பி வைத்­துள்ள கடிதம் பூர­ணத்­து­வ­மற்ற கடி­த­மாகும். அக்­க­டிதம் எவ­ருக்கும் விலா­ச­மி­டப்­ப­ட­வில்லை.

தலை­வ­ருக்கா? அல்­லது செய­லா­ள­ருக்­கா? எனக் குறிப்­பி­டப்­படவில்லை. அனுப்­பி­ய­வரின் பெயர் விப­ரங்­களும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. ஆனால்  பொது பல­சே­னாவின் கடி­தத்­த­லைப்பில் அனுப்­பப்­பட்­டுள்­ளது. அதனால் இது தொடர்­பான விப­ரங்­களை அந்த அமைப்­பிடம்  கோர­வுள்ளோம் என அகில இலங்கை ஐம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர்  அஷ்ஷெய்க்  எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி  தெரி­வித்தார். 

அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் அடங்­கி­யுள்­ள­வைகள் அனைத்தும் முழுப் பொய்­யாகும். பிற மதங்­களை நிந்­திப்­பது இஸ்­லாத்தின்  அடிப்­படைக் கோட்­பா­டு­களில் ஒன்று எனக் குற்றம் சுமத்திப் பல குர்ஆன்  அத்­தி­யா­யங்­களைச் சுட்­டிக்­காட்டி அதற்­கான தெளி­வு­களை வழங்­கு­மாறு  நேற்று முன்­தினம் பொது­ப­ல­சேனா அமைப்பு அகில இலங்கை ஜம் இய்­யத்துல்  உலமா சபைக்கு கடிதம் ஒன்­றினை அனுப்பி வைத்­தி­ருந்­தது. 

 நான்கு பக்­கங்­களைக் கொண்ட குறித்த கடிதம் தொடர்பில் வின­விய போதே உலமா சபைத்­த­லைவர் மேற்­கு­றிப்­பிட்­ட­வாறு தெரி­வித்தார்.  அவர் தொடர்ந்தும்  கருத்துத் தெரி­விக்­கையில், 

பொது­ப­ல­சேனா கோரி­யுள்ள விளக்­கங்­களை நாம் வழங்­கு­வ­தற்குத் தயா­ரா­க­வுள்ளோம். எமது தெளி­வுகள் உண்மை நிலையை அவர்­க­ளுக்கு உணர்த்தும் என நம்­பு­கிறோம். 

அவர்கள் கோரி­யுள்­ள­வற்­றுக்கு தெளி­வு­க­ளையும் விளக்­கங்­க­ளையும் நாம்  வெளி­யிட்­டுள்ள புத்­த­கங்கள் மூலம் ஏற்­க­னவே வழங்­கி­யுள்ளோம். இப்­புத்­த­கங்கள் சிங்­கள மொழியில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. “சமூ­கங்­க­ளுக்­கி­டையில்  சக வாழ்­வுக்­கான  கலந்­து­ரை­யாடல்” எனும் புத்­த­கத்தில் விளக்­கங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

சமா­தானம் மற்றும் சக­வாழ்வை நோக்­காகக் கொண்டே இப்­புத்­த­கங்கள் எழு­தப்­பட்­டுள்­ளன. அல்­கைதா, ஜிஹாத் அடிப்­ப­டை­வாதம், இஸ்­லா­மிய  பயங்­க­ர­வா­தத்தின் யதார்த்தம் என்ற தலைப்­பு­களில் தெளி­வுகள் வழங்­கப்­பட்­டுள்­ளன. 

என்­றாலும் அவர்­க­ளுக்கு மேலும் தெளி­வு­களை வழங்க உலமா சபை தயா­ராக இருக்­கி­றது. குர்­ஆனின் சில வச­னங்­களில் அவர்கள் இன்னும் தெளி­வில்­லாமல் இருக்­கி­றார்கள்.

தெளிவுபடுத்துவது எமது கடமையாகும். குர் ஆனின் போதனைகள் மக்களை நல்வழிப்படுத்துகின்றனவேயன்றி தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை. அனுமதிக்கவில்லை. குர்ஆன் கருணையையும் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையுமே போதித்துள்ளது 

 ARA.Fareel

8 comments:

  1. well done go ahead Mr. Rizvi.. Don`t stop your voice.....

    ReplyDelete
  2. மௌலவி ரிஸ்வி முப்தி அவர்களே,ஏன் அவர்கள் கடித்தை மக்களுக்கும் வெளிப்படுத்தக் கூடாதா?முஸ்லிங்களுக்கும் வெளிப்படை யதார்த்தம் விளங்கும் தானே?

    ReplyDelete
  3. விதண்டாவாதம் பேசும் பொதுபல வின் வாதங்கள் எங்களை போன்ற பாமர மக்களுக்கே புரிகிறது. இஸ்லாமிய அடிப்படையில் ஹிக்மத்தான விளக்கம் தான் வேண்டும்.

    ReplyDelete
  4. Poli Raaja Raani velayaattu...aadunga aadunga...ungal aattam conj nalaikku...!

    ReplyDelete
  5. BBS'ன் கடிதம் தலைவருக்கா, செயலாளருக்கா என்று பொது மக்களிடம் அறிக்கை விட்டு ஆராய்வதை முதலில் விடுங்கள். பெரும்பாண்மை மக்களுக்கு இஸ்லாத்தை பற்றி எற்றி வைப்பதற்கு ஒரு அறிய சந்தர்ப்பத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியுள்ளான். புத்தி ஜீவிகளை ஒன்றிணைத்து இதற்க்கு அறிய பதிலை மக்களுக்கு பொய் சேரும் வகையில் வழங்க வேண்டும். இந்த பெரும் பொறுப்பை அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ளான்.மேலே ஸஹோதரர் சொன்னது போல, ஹிக்மத்தான விளக்கம் தான் வேண்டும்.

    ReplyDelete
  6. விளங்கிக்கொள்ளும் நோக்கில் கேட்டிருந்தால் சரி விதண்டாவாதம் செய்வது தானே அவர்களின் நோக்கம் என்றாலும் நாம் ஹிக்மா மெள்இளதுல் ஹஸனஹ்வை கடைபிடிப்போம்

    ReplyDelete
  7. Muthi awarkale SUMMA NOTICE WITTUTU IRKKAMA THELIVANA PATHILAI KODUKKAWUM.............AHHH KUDUKKAMATTINGA

    ReplyDelete
  8. தலைவருக்கா அல்லது செயலாளருக்கா என விலாசமிடப்படாதது ஒரு பிரச்சினையே இல்லை.அதை விடுத்து இந்த விளக்க கோரிக்கையை இஸ்லாத்தைப் பற்றி அதன் சிறப்பம்சங்கள் உண்மைகளைப் பற்றி எடுத்துக் கூற ஒரு வாய்ப்பாக பயன்படுத்தலாம்.

    ReplyDelete

Powered by Blogger.