முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில், மேலும் பல திருத்தங்களை செய்வதற்கு தீர்மானம்
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை சிபாரிசு செய்வதற்காக ஓய்வுபெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூபின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு ஏற்கனவே தீர்மானித்திருந்த சட்டத்திருத்தங்களை விட மேலும் பல திருத்தங்களைச் செய்வதற்குத் தீர்மானித்துள்ளதுடன் நவம்பர் மாத இறுதியில் சிபாரிசுகளை பூரணப்படுத்தவுள்ளனர்.
நேற்று கொழும்பில், ஓய்வுபெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூபின் தலைமையில் ஒன்று கூடி குழுவின் அங்கத்தவர்கள் இத் தீர்மானத்தை மேற்கொண்டனர். நேற்றைய கூட்டத்தில் குழுவின் 17 அங்கத்தவர்களில் 15 பேர் கலந்து கொண்டிருந்தனர். இருவர் கலந்து கொள்ளவில்லை.
நேற்றைய கூட்டம் தொடர்பில் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூபைத் தொடர்பு கொண்டு வினவியபோது அவர் ‘விடிவெள்ளி’ க்குப் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் சுமார் 7 வருடங்களாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று இறுதியான கூட்டம் நடைபெற்றது.
என்றாலும் சில அங்கத்தவர்கள் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் பிரிவு சிலவற்றில் மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்கிறார்கள். அத்திருத்தங்கள் முக்கியமான விடயங்களில் அல்ல. எனவே அந்த திருத்தங்களையும் குழு சிபாரிசு செய்யவுள்ளது.
எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களின் பணிகள் பூரணப்படுத்தப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு குழு அங்கத்தவர்களின் கையொப்பங்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி பெற்றுக்கொள்ளப்படும்.
அதன் பின்பு நீதி அமைச்சரைத் தொடர்பு கொண்டு அறிக்கையைக் கையளிப்பதற்கான திகதி ஒன்றினை நிர்ணயித்து அன்றைய தினம் சிபாரிசுகள் அடங்கிய அறிக்கை நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷவிடம் கையளிக்கப்படும்.
அரசாங்கம் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை முன்மொழிவதற்காக நியமித்துள்ள அமைச்சரவை உப குழு விவகாரம் தொடர்பிலும் கூட்டத்தில் கலந்துரையாடி விவாதிக்கப்பட்டது.
அமைச்சரவை உபகுழு நியமனத்தின்பின்பு நாட்டில் உருவாகியுள்ள நிலைமை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது என்றார்.
ஓய்வுபெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூபின் தலைமையில் 2009 ஆம் ஆண்டு அப்போதைய நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினால் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களைச் சிபாரிசு செய்வதற்காக இந்தக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இக் குழுவில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர், செயலாளர், நீதிபதிகள், சிரேஷ்ட சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், பெண் பிரநிதிகள் உள்ளடங்களாக 17 பேர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய சில திருத்தங்கள் தொடர்பிலும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாசபை மற்றும் பெண் பிரநிதிகளுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் நிலவியமையே திருத்தங்களை சிபாரிசு செய்வதற்கு நீண்ட காலம் எடுத்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.
IF two parties disagree with each other in an issue related to Islam,, Allah says in Quran... Turn to Allah and his messenger. Make the sayings of Muhammed (sal) as final. It is not proper for a Muslim who belive in Allah and Rasool to take their openion over Allah and Rasool.
ReplyDeleteMuslims are not to compromise the SHAREEA with the day to day changes in the world that happens due to the evil life style adapted by human on earth and the daily changing human made law.
If any woman or man consider their desire over the SHAREEA... that is the end.. they are no more MUSLIMS as per SHAREEA. So remove them from the committee.
May Allah Guide us in the path of SALAF us saliheens.
Mr rasheed EVERYTHING DOING BY ACCORDING TO QURAN HADEES AND EXAMPLE OF SAHABA COMPANIONOF (MUHMD SAL )THEY ARE VERY EDUCATED PEOPLE.PLEASE WE MAKE DUA.
ReplyDeleteMr rasheed EVERYTHING DOING BY ACCORDING TO QURAN HADEES AND EXAMPLE OF SAHABA COMPANIONOF (MUHMD SAL )THEY ARE VERY EDUCATED PEOPLE.PLEASE WE MAKE DUA.
ReplyDeleteI need a small clarification from those who are opposing the amendments to the Muslim Personal Act (MPA) and accusing those who support the amendments in the light of the conflict with Sharia.
ReplyDeleteDo you accept MPA as the perfect representation of sharia guidelines with regard to its scope. If not why get so emotional with just the news of upcoming amendments.
If you say yes to the above, you are in complete darkness of wisdom and requires hours of learning of the MPA and practical issues it has created within the society.
I've seen certain elements in our society getting more and more vocal about the proposed amendment to the minimum age of marriage from 12 to 16 years. Sharia has never stipulated minimum age of marriage neither for men or women, yet we have 12 as the minimum age for women in MPA, which these sections of the society are trying to protect as god given divine law.
my final question is why these elements have never done a such mass scale protest asking to remove provisions of dawry from the MPA.