Header Ads



ஒழுக்கத்துடன் நடப்பேன் என, டன் பிரசாத் பிணை மனு - நிராகரித்தது நீதிமன்றம்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டன் பிரசாத் தான் இனிமேல நல் ஒழுக்கத்துடன் நடந்துகொள்வேன் எனவே தன்னை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் இன்று 18 ஆம் திகதி பிணை மனு கோரியிருந்தார்.

இதன்போது நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்ட மூத்த சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், எதிர்வரும் 25 ஆம் திகதிவரை டன் பிரசாத்தை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே அவரை தற்போது பிணையில் விடுதலை செய்யமுடியாது என்று வாதிட்டார்.

அத்துடன் எதிர்வரும் 25 ஆம் திகதி தான் ஒழுக்கத்துடன் செயற்படுவதாக நீதிமன்றத்தில் உத்தரவாதம் வழங்க வேண்டும் எனவும் அதுவரை அவருடைய விளக்க மறியல் நீடிக்கப்பட வேண்டுமெனவும் சிராஸ் நூர்தீன் சுட்டிக்காட்டினார்.

இதனை கவனத்திற்கொண்ட நீதிமன்றம் டன் பிரசாத்தின் பிணை மனுவை நிராகரித்தது

No comments

Powered by Blogger.