Header Ads



கொழும்பில் பலஸ்தீன, ஒருமைப்பாட்டு தின நிகழ்வு


பலஸ்­தீன ஒரு­மைப்­பாட்­டுக்­கான இலங்கை ஒன்­றியம் ஏற்­பாடு செய்­துள்ள ஐக்­கிய நாடு­களின் பலஸ்­தீன ஒரு­மைப்­பாட்டு தின நிகழ்வு எதிர்­வரும் 29 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை மாலை 4.15 மணிக்கு கொழும்­பி­லுள்ள விளை­யாட்­டுத்­துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடை­பெற உள்­ளது.

இவ் வைப­வத்தில் சுகா­தார அமைச்­சரும் இலங்கை , பலஸ்­தீன பாரா­ளு­மன்ற நட்­பு­றவுச் சங்­கத்தின் இலங்­கைக்­கான தலை­வ­ரு­மான டாக்டர் ராஜித சேனா­ரத்ன பிர­தம அதி­தி­யா­கவும் மேற்­படி சங்­கத்தின் இலங்­கைக்­கான செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பிமல் ரத்­நா­யக்க கௌரவ அதி­தி­யா­கவும் கலந்து கொள்­கின்­றனர்.

சிரேஷ்ட ஊட­க­வி­ய­லா­ளரும் சமூக நீதிக்­கான செயற்­பாட்­டா­ள­ரு­மான மஹிந்த ஹத்­தக விசேட உரை நிகழ்த்­துவார். இந்த வைப­வத்தில் புகைப்­படக் கண்­காட்சி ஒன்றும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது.

 மாலை 4.15 முதல் 6. 00 மணி வரை நடை­பெறும் இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு பலஸ்தீன போராட்டத்திற்கான தமது ஆதரவை வழங்குமாறு பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான இலங்கை ஒன்றியம் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

பலஸ்­தீன மக்­க­ளுக்­கான சர்­வ­தேச ஒரு­மைப்­பாட்டு தினம் என்றால் என்ன? 

1977ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச்­சபை பலஸ்­தீன மக்­க­ளுக்­கான சர்­வ­தேச ஒரு­மைப்­பாட்டுத் தினத்தை ஆண்­டு­ தோறும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி அனுஷ்­டிக்­கு­மாறு அழைப்­பு­வி­டுத்­தது. 1947ஆம் ஆண்டு மேற்­கு­றிப்­பிட்ட அதே தினத்தில் பலஸ்­தீனின் பிரி­வி­னைக்­கான பிரே­ர­ணை­யையும் பொதுச்­சபை ஏற்­றங்­கீ­க­ரித்­தி­ருந்­தது.

பலஸ்­தீ­னிய மண்: அது என்­ன­வாக இருந்­தது? அங்கு யார் இருந்­தனர்? எவ்­வ­ளவு காலத்­திற்கு?

பலஸ்தீன் குறித்து அறிந்­து­கொள்ள வேண்­டு­மெனில் கி.மு. 3000 ஆண்­டுகள் பின்­னோக்கிச் செல்ல வேண்டும். 1900 ஆண்­டுகள் (கி.மு.3000-– 1100) கானா­னியர் என்­ற­ழைக்­கப்­பட்ட மக்­களின் பூமி­யாக அது திகழ்ந்­தது. அக்­கா­லப்­ப­குதி முழு­வதும், அதா­வது கி.மு. 1200 இல் பிலிஸ்டைன்ஸ் மக்கள் அதனைக் கைப்­பற்றும் வரை, எகிப்­தி­யர்கள் அங்கு நிலை­கொண்­டி­ருந்­தனர். பிலிஸ்டைன்ஸ் அதனைக் கைப்­பற்­றிய பின்னர் அவர்கள் இஸ்­ர­வே­லர்­க­ளாலும் (கி.மு.1000-– 923: 77 ஆண்­டுகள்), பீனீ­சி­யர்­க­ளாலும் (கி.மு.923-– 700), அசி­ரி­யர்­க­ளாலும் (கி.மு.700 –-612), பாபி­லோ­னி­யர்­க­ளாலும் (கி.மு.539 வரை), பார­சீ­கர்­க­ளாலும் (கி.மு.332 வரை), மசி­டோ­னி­யர்­க­ளாலும் (கி.மு.63 வரை), உரோ­மா­னி­யர்­க­ளாலும் (கி.பி.636 வரை), அரே­பி­யர்­க­ளாலும் (636 –-1200: 564 ஆண்­டுகள்), சிலுவைப் போரா­ளி­க­ளாலும் (1099-– 1291), அய்­யூ­பி­யர்­க­ளாலும் (1187-– 1253), மம்­லூக்­கி­ய­ராலும் (1253-– 1516), உஸ்­மா­னிய ஆட்­சி­யா­ளர்­க­ளாலும் (400 ஆண்­டுகள்) பின்­தொ­ட­ரப்­பட்­டனர். இவை 1917ஆம் ஆண்டு (பல்போர் பிர­க­டன ஆண்டு) வரை தொடர்ந்து இடம்­பெற்­றவை. பின்னர் அது 1919 இல் பிரித்­தா­னிய மேலா­திக்­கத்­தினால் கைப்­பற்­றப்­பட்டு, 1922 இல் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வலு­வுக்கு வந்­தது. 

பலஸ்­தீ­னிய மண்ணில் குடி­ய­மர்ந்த பல இராச்­சி­யங்­களுள் ஒன்­றுதான் யூத இராச்­சியம் என்­பது மேற்­படி கால­வ­ரி­சை­யி­லி­ருந்து புல­னா­கின்­றது. 7ஆம் நூற்­றாண்டின் இறு­தி­யில்தான் அந்­நாடு மிகப் பிர­தா­ன­மாக ஓர் அரபு (மற்றும் இஸ்­லா­மிய) நாடாக உரு­வா­கி­யது. அரபு (முஸ்லிம் மற்றும் கிறிஸ்­தவ) மற்றும் யூத கலா­சா­ரங்­களின் மிகை­யா­ன­தொரு கலப்­புடன் அது 1516இல் உஸ்­மா­னியப் பேர­ரசின் ஒரு மாகா­ண­மாக உரு­வெ­டுத்­தது. பலஸ்தீன் என்­ற­ழைக்­கப்­பட்ட பூமி தமக்கே உரித்­தா­ன­தென இந்த மக்கள் தம்­ம­ளவில் நம்­பினர். 

இறு­தியில் பேர­ர­சுகள் காணா­மற்­போன போது, இறை­மை­யா­னது அந்த மண்ணைச் சேர்ந்த பழங்­குடி மக்­களின் இயற்­கை­யான குறிக்­கோ­ளாக உரு­மா­றி­யது. விட்­டுச்­செல்­வ­தற்குக் கால­னித்­துவம் மறுத்த இடங்­க­ளி­லெல்லாம், சுதந்­திரம் அடை­யப்­பெறும் வரை, உள்­நாட்டு விடு­தலைப் போர்கள் நடந்­தே­றின. ஆக்­கி­ர­மித்­துக்­கொண்ட சமூ­கத்­தினர் பிர­யோ­கித்த முரட்­டுத்­த­ன­மான பலப்­பி­ர­யோ­கத்­தி­னூ­டாக மக்கள் நிர்­மூ­ல­மாக்­கப்­பட்ட அல்­லது இனச்­சுத்­தி­க­ரிப்புச் செய்­யப்­பட்ட இடங்­களில், அவ்­விதம் ஆக்­கி­ர­மித்த சமூ­கங்கள் புதிய தேச அர­சு­க­ளாக உரு­வா­கின 

முதலாம் உல­கப்­போரின் பின்னர் வெற்­றி­யீட்­டிய நேச நாடுகள் மத்­திய கிழக்கில் 1916ஆம் ஆண்டு கைச்­சாத்­திட்ட துரோ­கத்­த­ன­மான சைக்ஸ்-­பிகொட் (Sykes-Picot) உடன்­ப­டிக்­கைக்­க­மைய, பிரான்ஸ் மற்றும் பிரித்­தா­னி­யா­வுக்கு இடைப்­பட்ட பிராந்­தி­யத்தைப் பிரித்­துக்­கொண்­டன. நாடு­களின் ஒன்­றி­யத்தின் கீழ்  (League of Nations) செயற்­பட்ட பணிப்­பாணை கொண்ட இந்த அர­சுகள் தமது பணிப்­பாணைக் காலப்­ப­குதி முடி­வுக்கு வந்­ததும், ஈற்றில் தேசி­யம்சார் அர­சு­க­ளாக பரி­ணாமம் அடைந்­தன. நிச்­ச­ய­மாக பலஸ்­தீனைத் தவிர. 

இன்­றைய நிலை

30 சத­வீத யூத மக்­க­ளுக்கு 55 சத­வீத நிலத்­தையும், 70 சத­வீத மக்­க­ளுக்கு 45 சத­வீத நிலத்­தையும் வழங்கி ஐக்­கிய நாடு­களின் தலை­யீட்டுப் பிரி­வொன்­றினால் இஸ்ரேல் உரு­வ­மைக்­கப்­பட்ட தினத்­தி­லி­ருந்து, பலஸ்­தீன மண்ணை இஸ்ரேல் அப­க­ரித்­துக்­கொண்டும் சூறை­யா­டிக்­கொண்­டுமே இருக்­கின்­றது. இஸ்­ரே­லுக்கும் அதன் அண்­டைய அரபு நாடு­க­ளுக்கும் இடையே 1948, 1967 மற்றும் 1973 ஆகிய ஆண்­டு­களில் நடை­பெற்ற ஒவ்­வொரு பாரிய யுத்­தத்தின் போதும், அதன் பின்­னரும், பலஸ்­தீன மண்ணின் பெரிய பகு­திக்­கூ­று­களை இஸ்ரேல் ஆக்­கி­ர­மித்து தன்­னுடன் இணைத்­துக்­கொண்டு வந்துள்ளது. 

சர்வதேசத்தின் கருத்தை வெளிப்படையாக மீறியும், சர்வதேச சட்டத்தை மீறியும், தான் ஆக்கிரமித்துக்கொண்ட பலஸ்தீன நிலப்பரப்பினுள் யூதக் குடியேற்றங்களையும், இராணுவ எல்லைக் காவலரண்களையும் இஸ்ரேல் தொடர்ச்சியாகக் கட்டியெழுப்பி வருகின்றது. 

அதேவேளை, (எகிப்திலுள்ள) நைல் நதிக்கரையிலிருந்து (ஈராக்கிலுள்ள) யூப்ரடீஸ் நதிக்கரை வரை பெரிய இஸ்ரேலை விரிவுபடுத்தும் தனது கனவை அடைந்துகொள்ளும் வரை இஸ்ரேல் உலகின் மிகப்பெரும் திறந்தவெளிச் சிறைக்கூடமான காஸாக் கரையிலும் மேற்குக் கரையிலும் பலஸ்தீன மக்களை அடக்கியொடுக்கும் பொருட்டு தொடர்ச்சியான யுத்தக் குற்றங்களை இழைத்து வருகின்றது. தான் ஜோர்தானுக்கு அருகாமையில் ஆக்கிரமித்துக்கொண்ட மேற்குக் கரையிலுள்ள பெரியதொரு செழிப்பான நிலப்பகுதியை தன்னால் உரிமை கொண்டாடக்கூடியதாக உள்ளதென இஸ்ரேல் அண்மையில் தெரிவித்திருந்தது. 

இடைவிடாத பிரச்சினைகளும் இஸ்ரேலுடைய விட்டுக்கொடுக்காத பண்பும் 
குடியேற்றங்களை நிறுவுதல்: ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட பலஸ்தீன நிலப்பகுதிகளினுள் குடியேற்றங்களை நிறுவிவருகின்றமையை நிறுத்துவதற்கான உளக்கருத்து தனக்கில்லை என்பதை இஸ்ரேல் மீண்டும் மீண்டும் பல தடவைகள் நிரூபணம் செய்துள்ளது. 
அகதிகளைத் திருப்பியனுப்புதல்: தமது கிராமங்களிலிருந்து ஆயுத முனையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மில்லியன் கணக்கான பலஸ்தீனியர்களை வரவேற்று அடைக்கலம் கொடுப்பதற்கு இஸ்ரேல் மறுத்து வருகின்றது. 

ஜெரூசலத்தின் அந்தஸ்து: எதிர்காலத்தில் அமையவுள்ள பலஸ்தீன் அரசின் தலைநகராக கிழக்கு ஜெரூசலம் அமையவேண்டுமென பலஸ்தீனியர்களும் சர்வதேச சமூகமும் வலியுறுத்தி வருகின்றமை ஒருபுறமிருக்க, ஒட்டுமொத்த ஜெரூசலத்தையும் இஸ்ரேல் வேண்டிநிற்கின்றது. 

2 comments:

  1. UN satisfying our Muslims by appointing a DAY for Palestine, while allowing and not stopping ISREAL land stealing programs.

    They are Good at pinching the baby and moving the cradle.

    ReplyDelete
  2. இஸ்ரேலியர்கள் இதுவரை கைப்பற்றிய பகுதிகள் 'இஸ்ரேல்' எனவும், பலஸதீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் 'பலஸ்தீனம்' என UN சட்டபூர்வமாக அறிவிக்கவேண்டும். பிரச்சனையும் முடிந்தது.

    இதே போல், நூற்றாண்டுகளுக்கு முன்னர் துருக்கி-சிரியா பகுதிகளிலிருந்து, இனவழிப்பு செய்யப்பட்டு துரத்தப்பட்ட 'அஸ்சிரியர்கள்' (கிருஸ்தவர்கள்) மக்களுக்கு இப்பகுதியில்
    புதிய நாடு ஒன்று உருவாக்கப்பட்டு, மீழகுடியேற்ற வேண்டும். இதற்கு USA/UK/ரஸ்யா/பிரான்ஸ் முயற்சி செய்ய வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.