Header Ads



முஸ்லிம்கள் விரும்பிய இடமெல்லாம் பள்ளிவாசலை நிர்மாணிக்கிறார்கள், நாம் புத்தர் சிலைகளை வைக்கமுடியாதா..?

முஸ்­லிம்கள் விரும்­பிய இடங்­க­ளி­லெல்லாம் பள்­ளி­வா­சல்­களை நிர்­மா­ணித்துக் கொள்­கின்­றார்­களே? ஏன் நாம் விரும்பும் இடங்­களில் புத்தர் சிலையை வைத்­துக்­கொள்­ள­மு­டி­யாது.

மாணிக்­க­மடு கிரா­மத்து மலையில் புத்தர் சிலை வைக்­கப்­பட்­டுள்­ளதை சவா­லுக்­குட்­ப­டுத்த முடி­யாது என பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான சார தேரர் தெரி­வித்தார்.

கொழும்பு கிரு­லப்­ப­னை­யி­லுள்ள பௌத்த மத்­திய நிலை­யத்தில்நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர்கள் மாநாட்டில் பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான  சார தேரர் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறினார்.

மாணிக்­க­மடு கிரா­மத்தில் தமி­ழர்­களும் முஸ்­லிம்­க­ளுமே வாழ்­கின்­றனர். அங்கு ஒரு சிங்­கள குடும்­பம் கூட இல்லை. இந்­நி­லையில் புத்தர் சிலை வைத்­தி­ருப்­பது இன நல்­லி­ணக்­கத்­திற்கு பாத­க­மாக அமை­யு­மல்­லவா? எனும் கேள்­விக்கு அவர் பதி­ல­ளிக்­கையில்;

புத்­தரின் சிலையை வைப்­பதால் இன நல்­லி­ணக்­கத்­திற்கு குந்­தகம் ஏற்­படும் என்று எவ­ராலும் கூற­மு­டி­யாது. மதங்கள் நல்­லி­ணக்­கத்தை கெடுப்­ப­வை­யல்ல. இது ஒரு பௌத்த நாடு.

இந்­நாட்டில் எந்த இடத்­திலும் புத்தர் சிலையை வைக்­க­மு­டியும். இதனை எவ­ராலும் தடுக்க முடி­யாது அது எங்­க­ளது உரிமை என்றார்.

இறக்­காமம் மாணிக்­க­மடு கிரா­மத்தின் மலை­யுச்­சியில் பெரும்பான்மை இனத்தவர்கள் புத்தர் சிலையொன்றினை வைத்து தியான மண்டபம் அமைக்கும்  நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ARA.Fareel

4 comments:

  1. ஒரு முஸ்லிம் கூட இல்லாத இடங்களில் பள்ளிவாசல் கட்ட எந்த தேவையும் இல்லை.
    நீங்கள் ஏன் இப்படி செய்கிரீர்கள்.

    ReplyDelete
  2. Buddhagama aaraksa karanakiyala buddhagama kelasana weda karanda epa buruwa.buduhamuduruwo kotanakawath vadarala neha unwahansege piliruhadala ekata vadinna..mewa baudda janatawage mudal gasakanda karana wedak.ada pilime tiyanawa .pasuwa ae ayama eakata hani karanawa.pasuwa jathiwadi kalabalayak ethikarala RATA awul karanawa.

    ReplyDelete
  3. Mehema veda karana ekanam BUDUHAMUDURUWantath buddhagamatath karana awamanayak.wandinda bauddayo nethi tena BUDUHAMUDURUWange piliru mokatada? Kurullanta lagindada?

    ReplyDelete
  4. அடே தேவுடா டுங்கி நீ ஒரு தேர அதிலும் உனக்குவேர ஞான
    ஒதவாங்கப்போர கூடியசீக்ரம்

    ReplyDelete

Powered by Blogger.