Header Ads



அரசாங்கத்தை கவிழ்ப்பது, படையினரின் பணியல்ல - சஜித்


அரசாங்கத்தை கவிழ்ப்பது படையினரின் பணியல்ல என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

இராணுவ சூழ்ச்சி அல்லது ஆட்சியை கைப்பற்றும் திட்டமொன்று காணப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சி கூறி வருகின்றது. இதன்மூலம் கூட்டு எதிர்க்கட்சியின் மனோ நிலையை தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது.

சதிப் புரட்சி மேற்கொள்வோ அரசாங்கத்தை கவிழ்க்வோ இராணுவத்தினர் நாட்டில் கடமையாற்றவில்லை.

இந்த எண்ணம் இந்த மனோ நிலை கூட்டு எதிர்க்கட்சியின் நிலைப்பாடாகவே கருதப்பட வேண்டும். கூட்டு எதிர்க்கட்சியினர் நாட்டை இராணுவ மயப்படுத்த முயற்சிகின்றனர்.

எந்த வழியிலேனும் அரசாங்கத்தை கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் கூட்டு எதிர்க்கட்சியினர் செயற்பட்டு வருகின்றனர் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.