Header Ads



முஸ்லிம் சட்டம், அல்­லாஹ்வின் சட்­ட­மாகும், அதில் மாற்றம் செய்யமுடியாது - ரிஸ்வி முப்தி

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக 2009 ஆம் ஆண்டு முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட குழு தனது சிபா­ரி­சு­களை எதிர்­வ­ரும் 21 ஆம் திகதி குழு அங்­கத்­த­வர்­க­ளிடம் கைய­ளிக்­க­வுள்­ளது. 

குழுவில் அங்கம் வகிக்கும் அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா சபை அச் சிபா­ரி­சு­களை முஸ்லிம் சிவில் அமைப்­பு­களின் பிர­நி­தி­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­யதன் பின்பே இறுதித்  தீர்­மா­னத்தை எடுக்கும் என அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா சபை தெரி­வித்­துள்­ளது.

குழுவின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் சிபா­ரி­சு­களை ஆராய்ந்த பின்பே அதில் உலமா சபை எதிர்­வரும் 27 ஆம் திகதி கையொப்­ப­மிடும் என அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா சபை முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய திருத்­தங்கள் தொடர்பில் முஸ்லிம் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­க­ளுடன் கலந்­து­ரை­யா­ட­லொன்­றினை நடத்­தி­யது. ஜம்­மி­யத்துல் உலமா சபையின் தலை­மை­ய­கத்தின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற இக்­க­லந்­து­ரை­யா­டலின் தேசிய சூரா கவுன்ஸில் வை.எம்.எம்.ஏ. ஜமா­அத்தே இஸ்­லாமி உட்­பட 18 அமைப்­பு­களின் பிர­நி­திகள் கலந்து கொண்­டனர்.

எதிர்­வரும் 21 ஆம் திகதி சலீம் மர்சூப் தலை­மை­யி­லான குழுவின் அறிக்கை ஜம்­மி­யத்துல் உலமா சபை­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டதும் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்ள சிபா­ரி­சுகள் தொடர்பில் ஆாய்ந்து இறுதி முடிவு எடுப்­பது என்று கலந்­து­ரை­யா­ட­லின்­போது தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

கலந்­து­ரை­யா­ட­லுக்குத் தலைமை வகித்த அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது;

முஸ்லிம் தனியார் சட்­டத்­தி­ருத்த விவ­கா­ரத்தில் யாரும் அவ­ச­ரப்­ப­டுத்த தேவை­யில்லை. அனை­வரும் நிதா­ன­மாக நடந்­து­கொள்­ள­வேண்டும். பொறு­மை­யாக ஒவ்­வொ­ரு­வரும் நிதா­ன­மாக தமது கருத்­துக்­களை முன்­வைக்க வேண்டும்.

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய திருத்­தங்­களை சுமு­க­மாகப் பேசியே தீர்­மா­னிக்க முடியும்.

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு அமைச்­ச­ரவை உப குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் முஸ்லிம் அமைச்சர் ஏற்­க­னவே சலீம் மர்­சூபின் தலை­மையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்ள விப­ரத்தைக் கூற­வில்லை. இத­னா­லேயே இவ்­வி­வ­காரம் சர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்­ளது.

முஸ்லிம் தனியார் சட்­டத்­தி­ருத்தம் தொடர்­பாக அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா சபை 1989 ஆம் ஆண்­டி­லி­ருந்து முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கி­றது. இதில் 25 உல­மாக்கள் பங்கு கொண்­டுள்­ளார்கள். 2009 இல் நிய­மிக்­கப்­பட்ட முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் தலை­மை­யி­லான குழு­விலும் உலமா சபை பங்கு கொண்­டுள்­ளது.

அங்­கத்­த­வர்­க­ளாக நானும் செய­லா­ளரும் இருக்­கிறோம்.

உலமா சபை முஸ்லிம் தனியார் சட்ட திருத்­தங்கள் தொடர்­பாக 40 க்கும் மேற்­பட்ட கலந்­து­ரை­யா­டல்­களை பத்வாக் குழுக்­க­ளுடன் நடத்­தி­யுள்­ளது. முஸ்லிம் தனியார் சட்டம் அல்­லாஹ்வின் சட்­ட­மாகும். தலாக் போன்ற சட்­டத்தில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அதில் மாற்றங்களைச் செய்ய முடியாது. அல்லாஹ்வின் சட்டத்தை நாம் மதிக்க வேண்டும். இச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலேயே பிரச்சினைகள் இருக்கின்றன.

எனவே சலீம் மர்சூபின் தலைமையிலான குழுவின் அறிக்கையைப் பெற்றதன் பின்பே எம்மால் இறுதித் தீர்மானத்தை எய்த முடியும் என்றார்.

விடிவெள்ளி  ARA.Fareel

No comments

Powered by Blogger.