Header Ads



இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் - மலேசிய நீதிமன்றத்துக்கு வருகிறது விசாரணை

மலேசியாவில் வைத்து இலங்கையின் உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் நடத்திய குழுவை தடை செய்ய மலேசிய அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கலந்தாலோசிக்க, இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்கள குழுவொன்று மலேசியா சென்றுள்ளது. இதன்போது இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கான குழு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த குழுவை மலேசியாவில் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையின் அதிகாரிக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த தாக்குதலை நடத்தயவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகைளை தாக்கல் செய்ய மலேசிய பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதேவேளை இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான விசாரணை நாளை மீண்டும் நீதிமன்றத்துக்கு வருகிறது.

No comments

Powered by Blogger.