Header Ads



குசல் பெரேரா பற்றி தவறான ஆய்வு - கத்தார் ஆய்வுகூடத்திற்கு தடை


இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் ஜனித் பெரேரா தடை­செய்­யப்­பட்ட ஊக்­க­ம­ருந்து பயன்­ப­டுத்­தினார் என தவ­றான அறிக்கை வழங்­கிய கத்தார் ஆய்வு கூடத்­திற்கு உலக ஊக்­க­ம­ருந்து தடுப்பு நிறு­வனம் (-WADA -வாடா) இடைக்­காலத் தடை விதித்­துள்­ளது.

இதற்­கான தீர்­மானம் வாடா நிறை­வேற்றுக் குழுத் தலை வர், இந்தத் தடை நவம்பர் 7 ஆம் திகதி முதல் நான்கு மாதங்­க­ளுக்கு அமுலில் இருக்கும் என வாடாவின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதன் பிர­காரம் குறிப்­பிட்ட திக­தி­யி­லி­ருந்து கத்தார் ஆய்­வு­கூ­டத்தில் சிறுநீர் மற்றும் இரத்த மாதி­ரிகள் ஆய்­வுக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வது தடை செய்­யப்­பட்­டுள்­ளது.

தடை அமு­லுக்கு வரும் வரையில் ஆய்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்ட மற்றும் ஆய்­வுக்குத் தயா­ரா­க­வுள்ள மாதி­ரிகள் வாடாவின் அனு­ம­திக்­கப்­பட்ட மற்­றொரு முகவர் ஆய்­வு­கூ­டத்­திற்கு பத்­தி­ர­மா­கவும் பாது­காப்­பா­கவும் அனுப்­பி­வைக்­கப்­ப­ட­வேண்டும் என தற்­கா­லிகத் தடைக்­குள்­ளான கத்தார் ஆய்­வு­கூ­டத்­திற்கு வாடா உத்­த­ர­விட்­டுள்­ளது.

ஆய்­வுகள் உயர் நிலையில் நடத்­தப்­ப­டு­வதை உறு­தி­செய்யும் நோக்­கிலும் விளை­யாட்டு வீர, வீராங்­க­னைகள் மத்­தியில் ஆய்­வுகள் தொடர்­பான நம்­ப­கத்­தன்­மையை உயர்த்தும் நோக்­கிலும் இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக வாடா நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

மேலும் கத்தார் ஆய்­வு­கூடம் தனது தடைக்­கா­லத்தில் சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களை முறை­யாக பேணி­யுள்­ளதை நிரூ­பித்தால் மீள் அனு­ம­திக்கு விண்­ணப்­பிக்க முடியும் என வாடா குறிப்­பிட்­டுள்­ளது.

எவ்­வா­றா­யினும் வாடாவின் 13.7ஆம் இலக்க விதி­க­ளுக்கு அமைய, தடைக்­கான தகவல் கிடைத்த 21 நாட்­க­ளுக்குள் விளை­யாட்­டுத்­துறை நியா­யா­திக்க சபை­யிடம் கத்தார் ஆய்­வு­கூடம் மேன்­மு­றை­யீடு செய்ய முடியும்.

வாடாவின் அனு­ம­தியைப் பெற்­றுள்ள 34 ஆய்­வு­கூ­டங்­களில் தடைக்­குள்­ளான ஏழா­வது ஆய்­வு­கூடம் கத்தார் ஆய்­வு ­கூ­ட­மாகும். பெய்ஜிங், ஆல்­மட்டி, புளூம்ஃ­பொன்டெய்ன், லிஸ்பன், மட்றிட், ரியோ ஆகிய நக­ரங்­களில் இயங்கி வந்து ஆய்­வு­கூ­டங்­க­ளுக்கு இதற்கு முன்னர் வாடா தடை விதித்­தி­ருந்­தது.

இதே­வேளை, குசல் ஜனித் பெரேரா தொடர்­பாக தவ­றான அறிக்கை சமர்ப்­பித்த கத்தார் ஆய்­வு­கூடம் தொடர்­பாக வாடா நிறு­ வனம் என்ன நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது என அண்­மையில் (நவ. 7) இலங்கை வருகைத் தந்­தி­ருந்த வாடாவின் பிராந்­திய உற­வுகள் பிரதிப் பணிப்­பாளர் டொம் மேயிடம் மெட்ரோ ஸ்போர்ட்ஸ் வின­வி­ய­போது, ‘‘அது தொடர்­பாக வாடாவின் சட்டப் பிரிவே நட­வ­டிக்கை எடுக்கும். வாடா வின் வேறு பிரிவில் நான் கட­மை­யாற்­று­வதால் அது குறித்து நான் அறிந்­தி­ருக்­க­வில்லை’’ என பதி­ல­ளித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

குசல் ஜனித் பெரேரா தொடர்­பாக கத்தார் நிறு­வனம் வெளி­யிட்­டி­ருந்த ஆய்வு அறிக்கை தவ­றா­னது எனவும் அதனை வாபஸ் பெறு­வ­தா­கவும் சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை கடந்த மே மாதம் 11 ஆம் திகதி அறி­வித்­தது. இதனை அடுத்து குசல் ஜனித் பெரே­ரா­வுக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தற்­க­கா­லிகத் தடையும் உட­ன­டி­யாக நீக்­கப்­பட்­டது. 

இந்த சம்­ப­வத்­தினால் பெரேரா எதிர்­கொண்ட சொல்­லொணா துய­ரங்­க­ளுக்கு வருந்­து­வ­தாக சர்­வ­தேச கிரிக்கட் பேர­வையின் பிர­தம நிறை­வேற்று அதிகாரி டேவ் றிச்சர்ட் சன் தெரிவித்துள்ளார்.

குசல் ஜனித் பெரேராவுக்கு கேடு விளைவிக்கும் வகை யில் வெளியிடப்பட்ட பகுப்பாய்வு அறிக்கையை கத்தாரில் இயங்கும் ஆய்வுகூடம் வாபஸ் பெற்றதை அடுத்தே ஒழுக்காற்று நடவடிக்கைகளை முடிவுறுத்திக்கொள்வதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.