Header Ads



தம்புள்ளயில் பள்ளிவாசலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு - தடுத்து நிறுத்துமாறு முஸ்லிம்கள் முறைப்பாடு


தம்­புள்ளை புனி­த­பூ­மியில் முஸ்­லிம்கள் புதி­தாக பள்­ளி­வா­ச­லொன்றை நிர்­மாணிப்­ப­தற்கு எதி­ராக தம்­புள்­ளையில் எதிர்­வரும் 19ஆம் திகதி ஆர்ப்­பாட்­ட­மொன்­றுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்ள நிலையில் தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் பாது­காப்பு வழங்­கு­மாறு தம்­புள்ளை பள்­ளி­வாசல் நிர்­வாகம் பொலிஸில் முறைப்­பாடு ஒன்­றினைச் செய்­துள்­ளது.

தம்­புள்­ளையில் அர­சாங்கம் பள்­ளி­வாசல் நிர்­மா­ணத்­துக்கு காணி ஒதுக்­கி­யுள்ள நிலையில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள இவ்­ஆர்ப்­பாட்டம் இனங்­க­ளுக்­கி­டையில் முறுகல் நிலையைத் தோற்­று­விக்கும் எனவும் சக­வாழ்­வினைப் பாதிக்கும் என்­பதால் குறிப்­பிட்ட ஆர்ப்­பாட்­டத்தைத் தடை­செய்­யு­மாறும் பொலி­ஸா­ரிடம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

19ஆம் திகதி முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள ஆர்ப்­பாட்டம் தொடர்­பான அழைப்­புகள் சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் முக­நூ­லிலும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தின் சார்பில் நிர்­வாக சபை உறுப்­பினர் எஸ்.வை.எம்.சலீம்தீன் இம் முறைப்­பாட்டைச் செய்­துள்ளார். முறைப்­பாட்டில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ‘தம்­புள்ளை பள்­ளி­வாசல் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி பேரி­ன­வா­தி­களால் தாக்­கப்­பட்­டது.

பள்­ளி­வாசல் தாக்­கப்­ப­டு­வ­தற்கு ஒரு தினத்­துக்கு முன்பு அதா­வது 19ஆம் திகதி பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது என்­றாலும் பொலிஸார் எது­வித தடை­க­ளையும் ஏற்­ப­டுத்­தா­ததால் 20ஆம் திகதி பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­டது.

இதனைத் தொடர்ந்து நாம் தம்­புள்ளை பொலிஸ் நிலை­யத்தில் 48 முறைப்­பா­டு­களைச் செயதுள்ளோம். ஆனால் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. 

பள்­ளி­வாசல் தற்­போது அமைந்­துள்ள இடத்­தி­லி­ருந்து அகற்­றப்­பட்டு புதி­யதோர் இடத்தில் அதனை நிறு­வு­வ­தற்­காக 100 மீற்றர் தூரத்­துக்கு அப்பால் அர­சாங்கம் காணி ஒன்­றினை இனங்­கண்டு காணியை எமக்கு காட்­டி­யுள்­ளது. இனம் காணப்­பட்ட காணி மது­பா­ன­சா­லை­யொன்­றுக்கு அரு­கி­லி­ருப்­பதால் அதி­லி­ருந்தும் 30 மீற்றர் தூரத்­துக்­கப்பால் காணி­யொன்­றினை அர­சாங்­கத்­திடம் கோரி­யுள்ளோம்.

இந்­நி­லை­யிலே தம்­புள்­ளை­யி­லுள்ள பேரி­ன­வாத அமைப்­புகள் எதிர்­வரும் 19ஆம் திகதி எதிர்ப்பு ஆர்ப்­பாட்­ட­மொன்­றினை ஏற்­பா­டு­செய்­துள்­ளனர் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துபேசி தம்புள்ளை பள்ளிவாசல் விவகார தீர்வுக்கான ஏற்பாடுகள் செய்துள்ளதாக முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விடிவெள்ளி  ARA.Fareel

2 comments:

  1. வேலைவெட்டியற்று இருப்பதால் இவ்வாறெல்லாம் மூளை வேலைசெய்கிறது. சும்மா இருக்கமுடியாவிட்டால் நாட்டை குளப்பாமல் விவசாயம், பசுவளர்ப்பில்
    ஈடுபடலாம் ...

    ReplyDelete

Powered by Blogger.