மஹிந்தவுக்கு சீனா அழைப்பு - இந்த மாதம் பறக்கிறார்
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இந்த மாத பிற்பகுதியில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று கூட்டு எதிரணி வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே மகிந்த ராஜபக்ச இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று கூறப்படுகிறது.
எதிர்வரும் நொவம்பர் 23ஆம் நாள் மகிந்த ராஜபக்சவின் சீனப் பயணம் இடம்பெறவுள்ளது.
இதன்போது, அவர், சீன அரச தலைவர்கள் மற்றும் சீனாவில் உள்ள சிறிலங்கா சமூகத்தினரைச் சந்திக்கவுள்ளதாகவும் கூட்டு எதிரணி வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும் எத்தனை நாட்கள் மகிந்த ராஜபக்ச சீனாவில் தங்கியிருப்பார் என்று தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த அச்சுறுத்தல் வந்தபின்பும் அரசு மௌனமாக இருந்தால் புகையிரதம் சென்ற பிறகு கைகாட்டிய நிலை வரும் என்பதை சரியாகப்புரிந்து செயற்பட வேண்டியது அரசாங்கத்தின் அவசிய அவசர பணியாகும்.
ReplyDelete