Header Ads



மைத்­தி­ரிபாலவை படுகொலைசெய்ய கொண்டுவரப்பட்ட குண்டு - பொலிஸார் சந்­தேகம்

பொலன்­ன­றுவை மன்­னம்­பிட்­டிய கேகலு கொலனி புரா­தன வாவிக்கு அரு­கி­லுள்ள வயல் ஒன்றில் காணப்­படும் புதரி­லி­ருந்து நேற்று முன்­தினம் 5 கிலோ­கிராம் நிறை­யு­டைய குண்டு ஒன்றை பொலன்­ன­றுவை பொலிஸ் நிலைய விசேட பணி­ய­கத்­தினர் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

இந்த குண்டு கடந்த யுத்த காலப் ­ப­கு­தி­களில் விடு­தலைப் புலி­ க­ளினால் மறைத்துவைக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என பொலிஸார் சந்­தேகம் தெரி­வித்­துள்­ளனர்.

தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரிபால சிறி­சேன யுத்தம் நில­விய காலப்­ப­கு­தியில் மகா­வலி அபி­வி­ருத்தி அமைச்­ச­ராக இருந்தபோது அவரை கொலை செய்­வ­தற்கு திட்­ட­மிட்­டி­ருந்த தற்­கொலை குண்­டு­தா­ரி­யொ­ருவர் சயனைட் உட்­கொண்டு தற்­கொலை செய்­தி­ருந்த நிலையில் அவர் தாக்­குதல் நடத்­து­வ­தற்­காக அதி­சக்­தி­ வாய்ந்த குண்­டு கள் இரண்­டி­னையும் கொண்டு வந்­தி­ருந்­ததாக தெரி­விக்­கப்­பட்­டது.

அவற்றில் ஒரு குண்டுஇ புல­னாய்வு பிரி­வி­ன­ருக்கு கிடைத்த தக­வ­லின்­படி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் மற்­றைய குண்டு உயி­ரி­ழந்த தற்­கொலை குண்டுதாரியினால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அந்தக் குண்டே இதுவாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப் பட்டுள்ளது.

(ரெ.கிறிஷ்­ணகாந்)

No comments

Powered by Blogger.