Header Ads



தம்புள்ளயில் பள்ளிவாசலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், அசம்பாவிதம் ஏற்படலாமென அச்சம்


மிகப்­பெ­ரிய பள்­ளி­வா­ச­லொன்­றினை நாங்கள் கட்டப் போவ­தா­கவும் தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்கு எதி­ரா­கவும் தம்­புள்­ளையில் 19 ஆம் திகதி ஆர்ப்­பாட்­ட­மொன்று நடாத்­து­வ­தற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.
இதனால் அசம்­பா­வி­தங்கள் ஏற்­ப­டலாம் என அஞ்­சு­கிறோம். 

எனவே ஆர்ப்­பாட்­டத்­துக்கு தடை­யுத்­த­ரவு பெற்றுக் கொள்ள ஏற்­பாடு செய்­யு­மாறு தம்­புள்ளை பள்­ளி­வாசல் நிர்­வாக சபை முஸ்லிம் அமைச்­சர்­களைக் கோரி­யுள்­ளது.

தம்­புள்ளை பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத் தலைவர் எம்.ஐ.எம்.கியாஸ் இக்­கோ­ரிக்­கையை முன்­வைத்­துள்ளார். கோரிக்­கையில் அவர் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது, 

தம்­புள்ளை பள்­ளி­வா­சலை வேறோர் இடத்தில் நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்கு நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை காணி­யொன்று ஒதுக்­கி­யுள்ள நிலையில் தம்­புள்­ளையில் பள்­ளி­வா­ச­லுக்கு எதி­ரான ஆர்ப்­பாட்டம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான ஆர்ப்­பாட்­டங்கள் தம்­புள்­ளையில் முஸ்லிம் மக்­க­ளுக்கும் பௌத்த மக்­க­ளுக்கும் இடை­யி­லான நல்­லு­றவைப் பாதிக்கும். இதனால் அசம்­பா­வி­தங்கள் ஏற்­ப­டலாம்.

தம்­புள்­ளையில் பெரும்­பா­லான முஸ்லிம் வர்த்­த­கர்­களும் இருக்­கி­றார்கள் அவர்­க­ளது வர்த்­த­கத்­துக்கும் பாதிப்பு ஏற்­ப­டலாம். அதனால் ஆர்ப்­பாட்­டத்தை தடுத்து நிறுத்­து­வ­தற்கு ஏற்­பா­டுகள் செய்­யுங்கள் என கோரப்­பட்­டுள்­ளது.

1 comment:

  1. ஏதும் நடந்தபின்புதான் பிச்சைக்கார அமைச்சர்கள் கருத்தே வெளியிடுவர்???

    ReplyDelete

Powered by Blogger.