Header Ads



ஹஜ் கட­மையை நிறை­வேற்ற, சம்­ப­ளத்­துடன் விடு­மு­றை வேண்டும்

மக்­க­ளுக்கு சேவை செய்­து­வரும் அரச, கூட்­டுத்­தா­பனம் மற்றும் சபை­களில் கட­மை­யாற்றும் முஸ்லிம் ஊழி­யர்கள் தங்­க­ளது மார்க்கக் கட­மை­யான ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்கு சம்­ப­ளத்­து­ட­னான விடு­மு­றையை வழங்­கு­மாறு  மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் அக்­க­ரைப்­பற்று அமைப்­பாளர் எம்.ஐ.அபூ­சஹீட், ஜனா­தி­பதி மற்றும் பிர­தம மந்­திரி ஆகி­யோ­ரிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்,

அரச மற்றும் அரச சார்­புத்­து­றை­களில் கட­மை­யாற்றும் முஸ்லிம் ஊழி­யர்­களின் சேவையை கௌர­வித்து இறு­திக்­க­ட­மை­யான ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்கு விடு­முறை பெற்றுக் கொள்ளும் போது சம்­ப­ள­மற்ற விடு­மு­றையே வழங்­கப்­பட்டு வரு­கி­றது. இதனால் குறிப்­பிட்ட மாதத்­திற்­கான சம்­பளம் வழங்­கப்­ப­டா­மலும் அவர்­க­ளு­டைய விடு­மு­றை­க­ளிலும் மேல­திக கொடுப்­ப­ன­வற்ற விடு­மு­றை­யிலும் கழிக்­கப்­பட்­டு­வ­ரு­கி­றது.

 மக்­க­ளுக்­கா­கவும், நாட்­டுக்­கா­கவும் சேவை செய்­து­வரும் முஸ்லிம் ஊழி­யர்­களின் சேவையை கௌர­வித்து வாழ்­நாளில் ஒரு முறை­யா­வது சம்­ப­ளத்­து­ட­னான விடு­முறை வழங்­கப்­ப­ட­வேண்டும்.

அவ்­வாறு வழங்­கப்­ப­டு­வதன் மூலம் மேலும் நாட்­டுக்­கா­கவும், மக்­க­ளுக்­கா­கவும் உழைக்­கக்­கூ­டிய சந்­தர்ப்­பமும் அவ் ஊழி­ய­ருக்கு ஏற்­ப­டு­வ­துடன் சிறந்த சேவை­யையும் பெற்­றுக்­கொள்ள முடியும்.

இவ் விட­யத்தை பாரா­ளு­மன்­றத்தில் உள்ள  முஸ்லிம்  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குரல் கொடுப்­ப­துடன், அமைச்­ச­ர­வையில் உள்ள முஸ்லிம் அமைச்­சர்கள் அமைச்­ச­ர­வையில் அழுத்தம் கொடுத்து முஸ்லிம் ஊழி­யர்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும்.

அத்­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முஸ்லிம் அரச மற்றும் அரச சார்புத்துறை ஊழியர்களின் நலன் கருதி சம்பளத்துடனான விடுமுறையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8 comments:

  1. Intha vidayattai Vijeydhasa Rajapaksa vidam koorinaal, ungalai ISIS enru sonnalum solluvaar kavanam...ayya!!

    ReplyDelete
  2. வேளை செய்யாமல் சம்பளம் பெறுவதை ஹஜ்ஜுக்கு போகும் உண்மையான முஸ்லீம் எடுக்க மாட்டான் வேண்டுமென்று பிரச்சினை கிளப்பி அரசியல் ஆதாயம் பெற நினைக்கும் இந்த கூத்தாடியை புறக்கணிக்கவும்

    ReplyDelete
  3. கடந்த காலங்களில் அரச ஊழியர்கள் எடுக்கும் சம்பளம் அரசாங்கம் வட்டியால் ஈட்டும் பணத்தில் இருந்து கொடுப்பதால் இப்பணத்துக்கு என்ன சட்டம்என்ற சர்ச்சை வந்ததது.அதேபோல் வங்கிகளில் வேலை பார்ப்பவர்கள் நேரடி வட்டப்பணத்தில் சம்பளம் பெறுகின்றார்கள் என்ற சர்ச்சை போனது அதைப்பற்றி யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.இவ்வாறல்லாம் ஹலால் ஹராத்தை சிந்திக்கும் நாம் ஏன் புனித ஹஜ் கடமையை செய்வதற்கு அரச சம்பளத்தை எதிர் பார்க்க வேண்டும் ,தெளிவான ஒரு அமலை செய்வதற்காக செல்லும் நாம் ஏன் இந்த தெளிவற்ற பணத்தை எதிர்பார்க் வேண்டும்.இவ்வாறு நாம் முன்பின் யோசிக்காமல் பேசுவதால் இனவாதிகள் அதையும் தூக்கிப்பிடிப்பார்கள்,30.40 வருடம் அரச சம்பளம் எடுப்பவர்கள் 20.அல்லது 30நாள் சம்பளத்தை வேலை செய்யாமல் ஏன் எதிர்பார்ப்பது,சிலவேளை அந்தப்பணம் ஹராமாக இருந்தால் ஹஜ்ஜுடைய நிலை என்னவாகும்.

    ReplyDelete
  4. காலத்துக்கும் நேரத்துக்கும் தகுந்த பேச்சாக நான் கருதவில்லை இப்பதிவை, இவற்றை கூற போய் இருப்பதும் இல்லாமலாகும் நேரமும் வரலாம்

    இஞ்சியை கொடுத்து மிளகாய் வாங்கிய கதையாய் இது அமைந்து விடாமல்,
    சுமூகமாக தீர்க்க வேண்டிய பிரச்சனை..

    ஹஜ் செய்பவர்கள், அரசாங்கத்தில் வேலை பார்பவர்களாக இருந்தால் அநேகமானவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஹஜ் செய்வதற்கு கிடைப்பதில்லை. வாழ்வில் ஒருதடம் செயவது கடமை, அதே போல் அந்த நாள்களுக்குரிய சம்பளத்தையும் யாவரையும் போல் தியாகம் செய்ய வேண்டியதுதான்,

    இதை ஒரு தலைப்பாக நீங்கள் இட்டமைக்கு ஆழ்ந்த கவலைகள்
    மக்களின் மனதில் சஞ்சலங்கள் ஏட்படக்கூடிய, குழப்பக்கூடிய பதிவுகளை ஒன்றுக்கு இருமுறை சிந்தித்து இடுங்கள்.

    ஜப்னா முஸ்லிமின் நலன் விரும்பியும், வாசகனும் ஆகிய நான்
    முனாஸ்

    ReplyDelete
  5. சகோதரர் அபூசஹீட் அவர்களே, இத்தருணத்தில் இக்கோரிக்கையை விடுப்பது உசிதமல்ல என நினைக்கின்றேன். அப்படித்தான் இருந்தாலும், உங்களது கட்சியின் தலைமைக்கூடாக அணுகலாமல்லவா? அக்கரைப்பற்றில் விரல் விட்டாவது எண்ணக்கூடிய ஆதரவாளர்களே இல்லாத கட்சியின் அமைப்பாளரான நீங்கள், இக்கோரிக்கையை விடுவது எவ்வளவோ நகைப்புக்கிடமானது. பொதுபல சேனா போன்ற இனவாத அமைப்புகளுக்கு இக்கோரிக்கை நல்ல தீனியாக அமையுமென்பது மட்டும் உறுதியாகும்.

    ReplyDelete
  6. Haj is for those who have :Good health , Wealth and
    fitness to travel . No need to do it "at any price."
    Why begging from anyone to do it if you cannot
    afford it ? Yes all public "servants" are trumpeting
    that they serve the country but love to ignore the
    fact that they are being paid by the people ! So
    public employees are well paid . If they want to do
    Haj , it should be out of their pockets !

    ReplyDelete
  7. THIRUMPI VANTHU SALARY YEDUKURE NOKATHIL ORU HAJJ TEVEYA

    ReplyDelete
  8. இந்த கோமாளியின் ஆசையை என்ன என்று சொல்வது,எமது பரிசுத்த மார்க்கம் ஹஜ் கடமையை வசதி படைத்தவர்களுக்கே கடமை ஆக்கி உள்ளது.அப்படி இருக்க அடுத்தவர்களிடம் பிச்சை வாங்கி ஹஜ் செய்ய சொல்ல வில்லை.இந்த நாடு இருக்கும் இந்த சூழலில் இப்படியான விடயங்களை நாம் முன் வைப்பதானது எங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளுடன் மென் மேலும் பிரச்சினையை கூட்டவே வழி வகுக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்.நன்றாக யோசித்து எந்த விடயங்களையும் செய்யுங்கள்.வீண் வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம்.தான் தான் பெரிய ஆள் ஆக வேண்டும் என்று நினைத்து முட்டாள் வேலையை செய்து சமூகத்தை படு குழியில் தள்ள வேண்டாம்.முன் பின் யோசிக்க தெரியாத மடையர்கள் நாட்டில் மலிந்து விட்டார்கள் அதனால் தான் இவ்வளவு பிரச்சினை கூடிக்கொண்டே போகுது.எச்சரிக்கை எச்சரிக்கை .....

    ReplyDelete

Powered by Blogger.