Header Ads



பௌத்த நிலையத்திற்கு தீ வைப்பு - பாதையில் நின்று மக்கள் போராட்டம்

கண்டி - மஹியங்கனை பிரதான வீதியின் ஹுன்னஸ்கிரிய பிரதேசத்தில் இன்று(11) பாதையை மறித்து பொது மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹீன்னஸ் கிரிய மக்களின் பிரதான வழிபாட்டுத்தலமும் கண்டி மக்களின் புனித ஸ்தலமுமாக மதிக்கப்படும் பௌத்த நிலையமொன்றுக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதைக் கண்டித்தே மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளமையினால் கண்டி - மஹியங்கனை பிரதான வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு மாற்று பாதையை பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய விஷமிகளுக்கு எதிராக பொலிஸார் சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதோடு குறித்த விடயத்தை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. BBS can make this type of criminal activities.

    ReplyDelete
  2. இது ஒரு திட்டமிட்ட சதியாகவூம் இருக்கலாம்.எனவே முஸ்லிம்கள் அவதானமாக இருப்பது நல்லது.யாவற்றுக்கும் அல்லாஹ் பேர துமானவன்.

    ReplyDelete
  3. This activities like Burma asin viraadu plan

    ReplyDelete
  4. BBS seithuviddu muslimkalin pakkam saadduathatkana Planing ithu. Be careful all muslim

    ReplyDelete

Powered by Blogger.