Header Ads



கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின், பரிசளிப்பு விழா


கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் 2015ம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா எதிர்வரும் நவம்பர் மாதம் 29ம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப. 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது. 

கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில் அதிபர் வு. ரிஸ்வி மரைக்கார் அவர்களது தலைமையில் நடைபெறவுள்ள இப்பரிசளிப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக கொழும்பு கல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டபீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழுவின் ஆணையாளருமான கலாநிதி பிரதீப மகாநாமஹேவா அவர்களும், கௌரவ அதிதியாக கொழும்பு வலயக் கல்விப் பணிப்பாளர் று.ஆ. ஜயந்த விக்ரமநாயக்க அவர்களும் கலந்து சிறப்பிப்பார்கள். 

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் கடந்த வருட பரிசளிப்பு விழாவுக்கு கௌரவ ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.