Header Ads



எம்.பி.க்களின் சம்பளம், கிடுகிடு என உயர்வு

இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தொகுதிகளில் பணிகளை மேற்கொள்வதற்கு 1 லட்சம்ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு தற்போது நாளொன்றுக்குவழங்கப்படும் 500 ரூபா கொடுப்பனவு, 2500 ரூபாவாக அதிகரிக்கதீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்து விரைவில் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, ஒரு மாதத்தில் இடம்பெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் 8 நாட்கள்தொடர்ந்து கலந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத கொடுப்பனவாகரூபா 20,000 வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய காப்பீடு நிறுவனத்தின் வழிமுறைகளின் கீழ், நாடாளுமன்றஉறுப்பினர்களுக்காக காப்பீடு தொகை அதிகரிப்பதற்கான நடவடிக்கைமுன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பில் தற்போதுகலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கயந்தகருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. இதற்க்கு பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து யாரும் பேச மாட்டார்கள் அப்படி பேசினால் கின்னஸ் புத்தகத்தில் எழுதலாம்.

    ReplyDelete
  2. People vote the MP to the parliament, to decide what the best to the country. There making decisions, what is the wrong?

    ReplyDelete
  3. If MP's do not resort to unethical means of income, this is reasonable, allowance for top executives of the country.

    ReplyDelete

Powered by Blogger.