Header Ads



ட்ரம்ப் வெற்றி பெற்றமையானது, ஹெல உறுமய கொள்கையின் வெற்றி

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிப் பெற்றமையானது ஜாதிக ஹெல உறுமய கொண்டுள்ள கொள்கையின் வெற்றியென அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த காலம் முழுவதும் ஜாதிக ஹெல உறுமய கட்சியினர் இனவாதிகள் என குற்றம் சுமத்தியது போல், டொனல்ட் ட்ரம்ப்பையும் இனவாதி, போர் மனநிலை கொண்டவர், மத வாதி என முத்திரை குத்திய போதிலும் அவரது தேசியவாதம் வெற்றிப்பெற்றுள்ளது.
ஜாதிக ஹெல உறுமய இலங்கையில் சிங்கள தேசியவாத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது.
இலங்கையின் பெரும்பான்மை இனமான சிங்கள் பௌத்தர்களின் உணர்வுகள்,தேசிய நிலைப்பாடுகள், இலங்கை அரசின் இருப்பு, பாதுகாப்புக்காக ஜாதிக ஹெல உறுமய குரல் கொடுத்தது.
தேசியவாதம் அன்று கடும் ஏளனத்திற்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டது. பலர் எம்மை இனவாதிகளாகவும் போர் மனநிலை கொண்டவர்கள் எனவும் மதவாதிகள் எனவும் விமர்சித்தனர்.
அதேபோலவே உலகில் பிரதான ஊடகங்கள் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப்பை இனவாதி, மதவாதி, போர் மனநிலை கொண்டவர், சிறுபான்மையினருக்கு எதிரானவர் என முத்திரை குத்தியதுடன் ஹிலரி கிளின்டனை ஆதரித்தன. எனவும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. You think Buddhism will be proud of you, Nishantha Sri Varnasingha? I think Buddha will hang himself if he knew someone like you proclaim to follow his teachings.

    Now check this out:

    "Hatred Wins" - Newspapers around the world are in shock over Trump victory.

    "America has embarrassed itself in front of the international community" - Aaron Sorkin

    "Demagogic populism is not only a problem in America" - German Finance Minister Wolfgang Schaeuble

    ReplyDelete
  2. MUSLIIMS ALSO EXPECTING AND PRAY FOR HIM TO WIN REASON ALREADY STARTED

    ReplyDelete
  3. இங்கு இனவாதத்தை கக்கும் அனைவரும் ட்ரம்ப் பின் பொருளாதாரக்கொள்கையோ.கலாச்சாரம் சார்ந்த கொள்கையோ.வெளிநாட்டுக்கொள்கையையோ யாரும் பார்க்கவில்லை மாறாக இவார் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படப்போவதாக கூறியுள்ள காரணத்தால் உலகில் உள்ளமமுஸ்லிம்களின் எதிரிகள் பாராட்ட ஆரம்பித்துவிட்டார்கள் இதில் விஷேசமாக இலங்கை இந்தியாவில் உள்ள காவிக்குள் மறைந்திருக்கும் தீவிரவாதிகள் அதீகமாக குதிக்கிறார்கள் .பயங்கரவாதம் எங்கிருந்து உதயமாகிறது எபதை இந்த வாழ்து சொல்லும் மத வெறியர்கள் அறிய மாட்டார்கள்காரணம் அவர்கள்தான் சிறுபான்மை சமூகத்துக்கு எதிராக தங்களின் பயங்கரவாதத்தை முன்னடுக்கின்றார்கள்,

    ReplyDelete
  4. Wild wolves howling in despair .How long will howling last ?

    ReplyDelete
  5. நிராகரிக்கும் அவர்கள் வெறுக்கின்றபோதும் இறைவன் அவனது ஜோதியை முழுமையாக்குவான்!

    ReplyDelete
  6. Allahvin dheenai awan ppdhuhaaappaaan....
    ومكروا ومكر الله والله خير الماكرين

    ReplyDelete

Powered by Blogger.