Header Ads



கலிமா சொன்ன உன்னதமான சமூகத்தின் பெயரால், அரசியல் செய்யாதீர்கள்..!

-Inamullah Masihudeen-

சமூக ஊடகங்களிலும் வலை தளங்களிலும் முழுநேர கூலிப்படைகள் வைத்து மிகவும் சிறுப்பிள்ளைத்தனமான மட்டராகமான அநாகரிகமான அரசியல் செய்வோர் உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள்.

கலிமா சொன்ன ஒரு உன்னதமான சமூகத்தின் பெயரால் மலிவான, இழிவான, ஹராமான நஜிஸான, கேவலமான, பொய் புரட்டு, மோசடிகள் நிறைந்த அரசியல் செய்யாதீர்.

நீங்கள் உலக மகா நடிகர்கள், உங்கள் அசிங்கங்களை ரசிக்க ஒரு கூட்டம் இருக்கலாம், சிலரை சில காலம் ஏமாற்றலாம், எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்ற முடியாது.

அல்லாஹ்வையும் உங்கள் மவுத்து சக்ராத்தையும் அஞ்சிக்கொள்ளுங்கள்.

சமூகம் மிகவும் இக்கட்டான ஒரு காலத்தை கடந்து கொண்டிருக்கும் பொழுது உங்கள் சாக்கடை அரசியலை சகிக்க முடியாது இருக்கிறது, தொல்லை தாங்க முடியவில்லை.

நீங்கள் பிரச்சினைகளின் பங்காளர் அன்றி தீர்வுகளின் பங்காளர் அல்ல. திருந்துங்கள், இல்லையென்றால் அல்லாஹ் உங்களிடமிருந்து உம்மத்தை பாதுகாக்க வேண்டும்.

அல்லாஹ்விற்காக மன்றாடிக் கேட்கின்றேன் உங்கள் அரசியல் சூதாட்டத்திற்கு அப்பாவி இளைஞர்களை ஏமாற்றி பலி கொடுக்காதீர்கள்.

பணநாயகம் உங்களையும் அவர்களையும் பாதாளம் வரை அழைத்துச் செல்லும் ஆபத்து குறித்து உங்களை எச்சரிக்கின்றேன்.

4 comments:

  1. MASHAALLAH IS MORETHAN ENOUGH.EXCELLENT》》》

    ReplyDelete
  2. MASHAALLAH IS MORETHAN ENOUGH.EXCELLENT》》》

    ReplyDelete
  3. SEVIDAN KAATHIL SANGU UUTHINA KADTHA THAAN

    ReplyDelete
  4. அரசியல் , அரசியல்வாதிகள் அவர்களின் பின்னால் காக்காய் பிடிப்பவர்கள் அனைவரும் சாக்கடைகளும் சுயநலவாதிகளும்தான்.
    கதிரைக்காகவும் , சிறு இலாபத்துக்காகவும் நம்சமூகத்தை அந்நியனிடம் காட்டிக்கொடுக்கவும் தயங்காத ஒரு கூட்டம்தான் இந்த அரசியல் சாக்கடைகள்தான்.

    ReplyDelete

Powered by Blogger.