Header Ads



புத்திக பத்திரனக்கே, இந்நிலை என்றால்..?

50 சதம் நஷ்டஈடு பெறுவதற்காக 25 ரூபா முத்திரைகள் இரண்டுடன் வருமாறு ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரணவின் தந்தையின் பெயருக்கு பதிவுத் தபாலில் கடிதமொன்று கிடைத்துள்ளது. ஆனால் அவர் 3 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டதாக புத்திக பத்திரண எம். பி. தெரிவித்தார்.

நெடுஞ்சாலை அமைச்சு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான நஷ்டஈடு வழங்குவது தொடர்பில் பிமல் ரத்நாயக்க நெடுஞ்சாலை அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்காக நேற்று சபையில் பதில் வழங்கிய அமைச்சரிடம் புத்திக்க பதிரண எம். பி. குறுக்குக் கேள்வி ஒன்றை முன்வைத்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தகவலைத் தெரிவித்தார்.

எனது தந்தை இறந்து 3 வருடங்களாகிறது. தந்தையின் விலாசத்துக்கு வந்த கடிதத்தில் ஒரு ரூபா 50 சதம் நஷ்டஈடு பெற இரு 25 ரூபா முத்திரை எடுத்து வருமாறு கோரப்பட்டிருந்தது. இதுதவிர 50 சத நஷ்டஈடு பெற 25 ரூபா முத்திரைகள் இரண்டுடன் வருமாறு எனக்கும் தங்கைகும் கடிதம் வந்தது.

No comments

Powered by Blogger.