Header Ads



முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டிவிட சதி - உளவுப் பிரிவு தகவல்

நாட்டில் முஸ்­லிம்­களின் உணர்­வு­களைத் தூண்­டி­விடும் நட­வ­டிக்­கைகள் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக உளவுப் பிரிவின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளதால் முஸ்­லிம்கள் நிதா­ன­மாக நடந்து கொள்ள வேண்­டு­மெ­னவும் நாட்­டி­லுள்ள பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் பாது­காப்பு வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

தம்­புள்­ளையில் பள்­ளி­வா­ச­லுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் எதி­ராக மேற்­கொள்ளத் திட்­ட­மிட்­டுள்ள ஆர்ப்­பாட்­டத்­துக்கு தடை­யுத்­த­ரவு பிறப்­பிக்­கு­மாறு பொலிஸ் மா அதி­ப­ரிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ள­துடன் இவ்­வி­வ­கா­ரத்தை ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்­துள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

தம்­புள்­ளையில் எதிர்­வரும் 19 ஆம் திகதி ஏற்­பாடு செய்­துள்ள ஆர்ப்­பாட்டம் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார். தொடர்ந்தும் அமைச்சர் ஹலீம் கருத்து தெரி­விக்­கையில், 

தம்­புள்­ளையில் முஸ்­லிம்­களும் பெரும்­பான்மை இனத்­த­வர்­களும் வர­லாறு தொட்டு நல்­லு­ற­வுடன் ஒற்­று­மை­யா­கவே வாழ்ந்து வரு­கின்­றனர். இந்­நி­லையில் சிலர் அர­சியல் சுய­லாபம் கருதி தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தை ஊதிப்­பெ­ருப்­பிக்­கின்­றனர். 

இப்­பள்­ளி­வாசல் விவ­கா­ரத்­துக்கு நிரந்­தர தீர்­வு­காண்­ப­தற்கு அனைத்து நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன. நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை மாற்­றீ­டாக காணி­யொன்­றி­னையும் ஒதுக்­கி­யுள்­ளது.

பள்­ளி­வா­சலை சூழ­வுள்ள குடும்­பங்­க­ளுக்கும் பள்­ளி­வா­ச­லுக்­கென்று ஒதுக்­கப்­பட்­டுள்ள காணிக்கு அருகில் காணி வழங்­கப்­பட வேண்­டு­மென்று கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யுடன் பேச்­சு­வார்த்­தைகள் நடாத்தி வரு­கிறோம். தம்­புள்ளை பிர­தேச செய­லா­ள­ரி­டமும் இக்­கோ­ரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. முஸ்­லிம்கள் பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளுடன் கலந்து வாழும் பிர­தே­சங்­களில் நாம் முரண்­பட்டுக் கொள்­ளாது எமது தேவை­களை நிறை­வேற்றிக் கொள்ள வேண்டும். 

தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்பில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுடன் கலந்து பேசியிருக்கிறேன்.

பள்ளிவாசல் நிர்வாகிகளையும் அழைத்து கலந்துரையாடல்களை நடாத்தத் திட்டமிட்டிருக்கிறேன். விரைவில் தம்புள்ளை பள்ளிவாசலுக்கு நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

விடிவெள்ளி  ARA.Fareel

2 comments:

  1. இன்ஷாஅல்லாஹ் நிரந்தரத்தீர்வு கிட்ட துஆ செய்வோம்,
    தூண்டுதல் சதி என்பது மறுக்க முடியாத உன்மை, பொறுமைகாப்பது அவசியம் ஆனால் வரம்பை மார்க்கம் காட்டியுள்ளது.
    உட்பூசலை தலமேல் தூக்கிப்பிடிக்காமல், ஒற்றுமையெனும் கயிற்றை பற்றிப்பிடிப்போம் இன்ஷாஅல்லாஹ்....

    ReplyDelete
  2. புரிந்துணர்வு என்பதற்காக சமூகம் பிழவுபடுவது வருந்தத்தக்கது.

    ReplyDelete

Powered by Blogger.