Header Ads



உறக்கத்தில் நடந்தவர், கிணற்றில் வீழ்ந்து மரணம்

(எஸ். கே)

வர­கா­பொல, வேர­கல பிர­தே­சத்தைச் சேர்ந்த  நப­ரொ­ருவர்  இரவு தூக்­கத்தில் நடந்து சென்று கிணற் றில் வீழ்ந்து உயி­ரி­ழந்­துள்­ள­தாக தேடி­கம பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். வர­கா­பொல  வேர­கல கிரா­மத்தைச் சேர்ந்த 74 வய­தான நான்கு பிள்­ளை­களின் தந்­தையே இவ்­வாறு உயி­ரி­ழந்­த­வ­ராவார்.

உயி­ரி­ழந்த நபர் தனது வீட் டில் கடை ஒன்றை நடத்தி வந்­த­தா­கவும் பின்னர் சுக­யீனம் கார­ண­மாக சிகிச்சை பெறு­வ­தற்­காக கடையை மூடி­விட்­ட­தா­கவும் இந்த நபர் நீண்ட காலம் உறக்­கத்தில் நடக்கும் பழக்­கத்தைக் கொண்­டி­ருந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

சம்­பவ தினத்­தன்று இந்த நபரின் மனைவி அதி­காலை 2.30 மணிக்கு எழுந்து பார்த்த போது கண­வனை படுக்­கையில் காண­வில்லை எ ன்றும் வீட்­டி­லி­ருந்து 30 மீற்றர் தொலைவிலுள்ள கிணற்றில் அவரது சடலம் காணப்பட்டதாகவும் தெரி வித்துள்ளார்.

No comments

Powered by Blogger.