Header Ads



நாங்கள் தாக்கினால் இந்தியாவில் பல தலைமுறைக்கு மறக்க முடியாது -பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆவேசம்


நாங்கள் துல்லியத் தாக்குதல் நடத்தினால் இந்தியாவால் அதனை பல தலைமுறைக்கு மறக்க முடியாது என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி ரஹீல் ஷெரீஃப் தெரிவித்தார்.

ரஹீல் ஷெரீஃப் வரும் 29-ஆம் தேதி ராணுவ தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் கைபர் பகுதியில் வியாழக்கிழமை கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் பங்கேற்ற ரஹீல் ஷெரீஃப் பேசியதாவது,

பாகிஸ்தானில் புகுந்து துல்லியத் தாக்குதல் நடத்தியதாக இந்தியா கூறுவது பொய். அப்படி இந்திய ராணுவம் நமது எல்லைக்குள் புகுந்தால் அவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்கும் வல்லமை பாகிஸ்தான் ராணுவத்துக்கு உண்டு.

பாகிஸ்தான் ராணுவம் துல்லியத் தாக்குதல் நடத்தினால் இந்தியாவால் அதனை பல தலைமுறைக்கு மறக்க முடியாது. இந்தியா தனது பள்ளிப் பாடமாக அதனை வைத்து, இப்படித்தான் துல்லியத் தாக்குதல் நடத்த வேண்டும் என்று தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் அளவுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் இருக்கும்.

திட்டமிட்டபடி வரும் 29-ஆம் தேதி ராணுவ தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெற இருக்கிறேன். அதன் பிறகு ராணுவத்தில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தின் நலவாழ்வுக்கான பணிகளில் ஈடுபட இருக்கிறேன் என்றார் அவர்.

No comments

Powered by Blogger.