Header Ads



''இலங்கை முஸ்லிம் சமூ­கத்தில், பெரும் பதற்­றம் ஏற்­ப­ட்­டுள்ளது''

ஜீ.எஸ்.பி பிளஸ் சலு­கைக்கு தகைமை பெறும் பொருட்டு இலங்­கையில் உள்ள முஸ்லிம் தனியார் சட்­டத்தில் சில சீர்­தி­ருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்கு அர­சாங்கம் திட்­ட­மிட்டு வரு­வ­தாக வெளி­யா­கி­யுள்ள செய்தி, இலங்கை முஸ்லிம் சமூ­கத்தில் பெரும் பதற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக தேசிய ஷூரா சபை வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தும் அர­சாங்­கத்தின் திட்டம் தொடர்பில் தேசிய ஷூரா சபை விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 

கடந்த ஆட்­சியின் போது மனித உரிமை மீறல்கள் தொடர்­பான விட­யங்கள் கார­ண­மாக ஐரோப்­பிய ஒன்­றியம் நமக்கு வழங்­கி­யி­ருந்த ஜீ.எஸ்.பி பிளஸ் சலு­கையை நீக்கிக் கொண்­டது.

இதன் போது, மனித உரி­மைகள் மற்றும் அர­சியல் உரி­மை­களை கடந்த அர­சாங்கம் மீறி வந்­த­மையே அதற்­கான பிர­தான கார­ணங்­க­ளாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டன.

அதன் பின் ஆட்­சிக்கு வந்த தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்கம் ஜீ.எஸ்.பி பிளஸ் சலு­கையை மீண்டும் பெறு­வ­தற்கு பெரும் முயற்சி எடுத்து வந்­த­துடன், இறு­தியில் அச்­ச­லு­கையை மறு­ப­டியும் பெற வேண்­டு­மாயின் அதற்­காக 58 நிபந்­த­னை­களை ஐரோப்­பிய ஒன்­றியம் இலங்­கைக்கு விதித்­துள்­ள­தாக ஊட­கங்கள் மூலம் அறி­யக்­கி­டைத்­தது.

நாம் அறிந்த விதத்­திலும் வெளி­யா­கிய தக­வல்களின் படியும் மேற்­படி நிபந்­த­னைகள் அனைத்தும் மனித மற்றும் அர­சியல் உரி­மை­களை பாது­காப்­பது தொடர்­பா­ன­வையே.

இந்த நிலையில், ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் நிபந்­த­னை­க­ளுக்கு இசை­வாகும் ஒரு நட­வ­டிக்­கை­யாக இலங்­கையின் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் சில மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த உப குழு­வொன்றை நிய­மிப்­ப­தற்கு அமைச்­ச­ரவை தீர்­மானித்­துள்­ள­தாக வெளி­யா­கிய செய்தி இலங்கை முஸ்­லிம்­களை வியப்­பிற்கும் அதிர்ச்­சிக்கும் உட்­ப­டுத்­தி­யுள்­ளது.

இஸ்­லா­மிய சட்­டத்­துடன் இசை­வாகும் விதத்தில் தற்­போது இலங்­கையில் உள்ள முஸ்லிம் தனியார் சட்­டத்தில் சில மாற்­றங்­களை மேற்­கொள்ள வேண்டும் என்ற கருத்தை தேசிய ஷூரா சபையும் கொண்­டுள்­ளது.

ஆனால், அச்­சீர்­தி­ருத்தம் தொடர்­பான செயற்­பா­டு­களை இஸ்­லா­மிய மார்க்க அறி­ஞர்கள் தலை­மையில் முஸ்லிம் சமூ­கமே மேற்­கொள்ள வேண்டும் என்­பதும் அதைத் தவிர்த்து, அந்த மாற்­றங்கள் வெளி நபர்­களால் மேற்­கொள்­ளப்­பட முடி­யாது என்­பதும் எமது நிலைப்­பா­டாகும்.

இறை கட்­ட­ளை­களின் அடிப்­ப­டையில் உள்ள இஸ்­லா­மிய சட்­டங்­களில் உள்­நாட்டு சூழ­லுக்கு ஏற்­ற­வாறு சில சிறிய மாற்­றங்­களை மேற்­கொள்­வ­தென்­பது மிகவும் எச்­ச­ரிக்­கை­யுடன் அணுக வேண்­டிய ஒரு விட­ய­மாகும்.

இத­ன­டிப்­ப­டையில், இவ்­வி­டயம் தொடர்­பாக நீதி­பதி ஸலீம் மர்சூஃப் தலை­மையில் பல முஸ்லிம் மார்க்க அறி­ஞர்கள் மற்றும் விற்­பன்­னர்­களைக் கொண்ட ஒரு குழுவை அர­சாங்கம் நிய­மனம் செய்­த­துடன், கடந்த 7 ஆண்டு கால­மாக இது பற்றி அக்­குழு தீவி­ர­மாக ஆராய்ந்து வரு­கின்­றது. அத்­துடன், அக்­கு­ழுவின் இறுதி அறிக்கை முற்றுப் பெறும் தறு­வாயில் உள்­ள­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

இந்த நிலையில், இது போன்ற பார­தூ­ர­மான ஒரு விட­யத்தை அமைச்­ச­ரவை நிய­மித்­துள்ள ஒரு உப குழுவின் பொறுப்பில் விடு­வதன் விவேகம் பற்­றிய கேள்வி இயல்­பா­கவே எழு­கின்­றது.

மேலும், இதில் உட்­படும் முஸ்லிம் அமைச்­சர்கள் ஏதேனும் தவ­றுகள் செய்யும் பட்­சத்தில் இஸ்­லா­மிய சமூ­கத்தின் தீராத விச­னத்­திற்கும் இலக்­காகும் அபா­யமும் உள்­ளது என்­ப­தையும் அவர்கள் கவ­னத்தில் கொள்ளல் வேண்டும்.

ஒரு­வ­ருக்கு விருப்­ப­மான மதத்தைப் பின்­பற்றும் உரிமை நம் அர­சியல் யாப்பு மூலமே உறுதி செய்­யப்­பட்­டுள்­ளதை யாவரும் அறிவர். அதன் படி, இஸ்­லாத்தின் சட்ட திட்­டங்கள் மீது கை வைப்­பது என்­பது ஒரு ஜன­நா­யக உரிமை மீது கை வைப்­ப­தற்கு சம­மாகும்.

தமது மார்க்­கத்தின் அடிப்­ப­டையில் செயற்­படும் சுதந்­தி­ர­மா­னது கால­னித்­துவ ஆட்­சிக்கும் முன்­பி­ருந்தே முஸ்­லிம்­க­ளுக்­குள்ள ஒரு உரி­மை­யாகும்.

அத்­துடன், இஸ்­லா­மிய சட்­டமும் தனி­நபர் சட்­டமும் நம் நாட்டில் ஒரே சட்டக் கோவையில் இடம் பெற்­றுள்­ள­மை­யா­னது, இன பன்­மு­கத்­தன்மை இலங்­கையின் அர­சியல் சாசனம் மூலமே ஊர்­ஜிதம் செய்­யப்­பட்­டுள்­ள­மைக்­கான சிறந்த ஒரு உதா­ர­ண­மாகும்.

அத்­துடன் பல இனங்கள் சம உரி­மை­யுடன் வாழும் ஒரு தேசம் என்ற வகையில் நாம் பெரு­மைப்­படக் கூடிய ஒரு விட­யமும் ஆகும்.
இதை பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தா­னது அர­சாங்கம் தற்­ச­மயம் மேற்­கொண்டு வரும் நல்­லி­ணக்கச் செயற்­பா­டு­க­ளையும் பாரிய விதத்தில் பின்­ன­டையச் செய்­து­வி­டலாம்.

எனவே, ஒரு தலைப்­பட்­ச­மாக அரசு திட்­ட­மிட்டு வரும் மேற்­படி முஸ்லிம் தனியார் சட்ட சீர்­தி­ருத்த முன்­னெ­டுப்பை, ஸலீம் மர்சூஃப் குழுவின் அறிக்கை வெளிவரும் வரை பிற்படுத்துமாறு தேசிய ஷூரா சபை கேட்டுக்கொள்கின்றது.

அத்துடன், 2015 ஜனவரி மாதத்தில் நம் நாட்டு அரசியல் அரங்கில் ஏற்பட்ட சரித்திர முக்கியத்துவம் மிக்க மாற்றத்திற்கு துணிச்சலாக தோள் கொடுத்து முக்கிய பாத்திரமேற்று செயற்பட்ட முஸ்லிம் சமூகத்தின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்குமாறும் நல்லாட்சி அரசாங்கத்தை எமது சபை கேட்டுக்கொள்கின்றது.

4 comments:

  1. ஐரோப்பிய நாடுகளில் அரசாங்கம் பிச்சை பாத்திரம் ஏந்துவதற்கு, யூதர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய இலங்கை முஸ்லீம்களின் உரிமையில் கை வைக்க துடிக்கும் அரசாங்கம் முஸ்லிம்கள் செய்த உபகாரத்துக்கு நன்றி மறந்து நடப்பது கேவலத்திலும் கேவலம் .அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு பாதகமான முயற்சிகளும் மஹிந்தவின் எதிர்கால வெற்றியை உறுதிப்படுத்திக்கொண்டு இருக்கிறது .

    ReplyDelete
    Replies
    1. @mustafa, என்ன உபகாரங்கள் செய்தீர்கள்?

      Delete
    2. இந்த அரசாங்கம் வரக்காரணமே முஸ்லிம்கள்தான்,இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்த சிங்களவர்களுடன் தமிழர்களின் வாக்கால் மட்டும் இந்த அரசாங்கம் வர முடியாது முஸ்லீம் களின் வாக்கும் அவசியமானது அதுதான் உபகாரம் அதே போன்றுதான் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் சிங்கள.முஸ்லிம் வாக்கால் மட்டும் வரமுடியாது ஆகவே இந்த அரசு தமிழ் முஸ்லிம் மக்களின் உபகாரத்தை பெற்றே ஆட்சி பீடம் ஏறியது,அதனால் இந்த இரண்டு சமூகங்களுக்கும் இவர்கள் நன்றிக்கடன் பட்டுள்ளார்கள்

      Delete
  2. The “Yahapalana Government” is NOT going to listen to the “SHOORA COUNCIL” for that matter. “The Muslim Voice” already has exposed/warned the Muslim Community of how these unscrupulous and deceptive Muslim Organizations will statege drams and issue “PRESS STATEMENTS” to “DECEIVE” the poor Muslim Community voters. “The Muslim Voice” wishes to state again that some of the organizing members/office bearers of the SHOORA COUNCIL in the aftermath of these were political events were offered very high positions in the “Yahapalana Government” at the cost of the poor and humble Muslim vote bank and are enjoying the “POSITION and PERKS” even today. As such, Muslims in Sri Lanka do NOT have a voice – a POLITICAL VOICE for that purpose. So how will the “Yahapalana Government” will LISTEN to the SHOORA COUNCIL” ? Is this NOT logic – “POLITICAL LOGIC”? We have lost our POLITICAL/COMMUNITY “VOICE” since our vote-bank had been traded by our politicians. The SLMC is dead. The ACMC is busy making money and covering the corruption charges made against them, the Muslim politicians stooging the UNP are ONLY interested in their personal benefits. The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the Yahapalana government and enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The Muslim Civil Society, the The National Shoora Council, MCSL, the All Ceylon Jammiyathul Ulema (ACJU) and Muslim Media organizations in Sri Lanka and their leaders will stage dramas by releasing “press statements” because all of them have been well taken care by the Yahapalana government and the foreign interests who are giving them large amounts of funding to keep their mouth shut. Like what happened in Aluthgama, Beruwela, Maharagama and Dambulla, they all have helped the government to COVER UP everything. The TRUTH has been hidden and the Muslims have been told a “LONG STORY, as being told now. WHY HAS THE SHOORA COUNCIL NOT PUT PRESSURE ON THE YAHAPALANA GOVERNMENT or got their closet ally – Chandrika Bandaranaike Kumaratunge to get her close supporter – The Minister of Foreign Affais, MP. Mangala Samaraweera to STOP this issue. NO, THEY CANNOT. They have been well taken care of.
    It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.THIS IS THE ONLY WAY THE MUSLIMS CAN SAFEGUARD THE MUSLIM COMMUNITY AGAINST THE YAHAPALANA GOVERNMENT (or for that matter any government) AMENDING ANY LEGISLATIVE ENACTMENTS OR MUSLIM LAWS ALREADY ENACTED BY PARLIAMENT AND MADE LAW IN THE COUNTRY. The Yahapalana government (President Maithripala Sirisena and PM Ranil Wickremaratne) has forgotten that it was the minority Muslim votes and the Tamil votes and a very small fraction of the Sinhala votes the tipped the balance for the “Hansaya” to win the Presidential Elections in 2015. The en-block Muslim votes and Tamil votes to the Muslim candidates and the Tamil candidates made the Yahapalana government to get their majority in parliament in the 2015 general elections. In the next elections, surely the Muslims are contemplating to vote the “Joint Opposition” to power, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener – “The Muslim Voice”.

    ReplyDelete

Powered by Blogger.