Header Ads



மின்குமிழை மாற்ற, ஏணியில் ஏறியவர் சறுக்கிவிழுந்து வபாத்

மட்டக்களப்பு,  புதிய காத்தான்குடி   பகுதியில் மின்குமிழை மாற்றுவதற்காக ஏணியில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் சறுக்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

4 பிள்ளைகளின் தந்தையான ஆதம்பாவா முஹம்மது ஹனீபா (வயது 47) என்ற குடும்பஸ்தரே மரணித்தவராவார்.

இவர் தனது வீட்டிலுள்ள செயலிழந்த மின்குமிழை மாற்றுவதற்காக ஏணியில் ஏறியபோது சறுக்கி கீழே விழுந்துள்ளார்.

உடனடியாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

4 comments:

Powered by Blogger.