Header Ads



ஜனாதிபதி கனவுடன் கோத்தா..?

இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரபல வர்த்தகர் ஒருவரிடம் கோத்தபாய தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தான் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் தனக்கான நிதியுதவிகளை செய்யுமாறு, கோத்தபாய வர்த்தக சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோத்தபாயவின் அரசியல் பிரவேசம் தொடர்பில் ஆர்வம் கொண்ட வர்த்தகர், எந்த கட்சியில் போட்டியிடவுள்ளீர்கள் என கேட்டுள்ளார்.

மலர் மொட்டை சின்னமாக கொண்ட கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தனக்கு மாத்திரம் வாய்ப்புள்ளதாக கோத்தபாய தெரிவித்துள்ளார்.

கோத்தபாய அரசியல் ஈடுபடும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

அதனொரு கட்டமாக கோத்தபாயவினால் “வியத் மக” என்ற அமைப்பின் ஊடாக நாடு முழுவதும் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. ஜனாதிபதி தேர்தலில் தனக்கான ஆதரவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கோத்தபாய இவ்வாறு செயற்படுவதாக அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2 comments:

  1. கோத்தா கைது செய்யப்படலாம் என ஒரு தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது... பொருந்தவில்லை.

    ReplyDelete
  2. Meendum makkalai kolla aasai wandatu pol irukku.iwanukku yaar ottu koduppadu.

    ReplyDelete

Powered by Blogger.