Header Ads



எனது இணையத்திற்குள் ஊடுருவிய மாணவனுக்கு, ஐ போனை பரிசளித்தேன் - ஜனாதிபதி


இலங்கை ஜனாதிபதி செயலக உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் ஊடுறுவிய மாணவனுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெறுமதியான ஐபோன் ஒன்றை பரிசளித்துள்ளார்.

மாணவனுக்கு ஐபோன் வழங்கிய தொடர்பில் ஜனாதிபதி நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டார்.

“எனது இணையத்தளத்திற்குள் ஊடுறுவிய மாணவனை அழைத்து சில பரிசுகளை வழங்கியிருந்தேன். அத்துடன் எனக்கு கடந்த வாரம் பெறுமதியான ஐபோன் ஒன்று பரிசாக கிடைத்திருந்தது.

நான் அந்த ஐபோனை அந்த மாணவனுக்கு வழங்கினேன். வழங்கியதன் பின்னர் இந்த ஐபோனிலும் என இணையத்தளத்தை ஊடுருவ வேண்டாம் என கூறினேன்.

இதனை நல்ல விடயங்களுக்காக பயன்படுத்துமாறு கூறி மேலும் சில பரிசு பொருட்களை வழங்கியிருந்தேன்...” என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலக உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுறுவிய மாணவன், தனது குடும்பத்தினருடன் ஜனாதிபதியை சந்திருந்திருந்தார்.

இந்த சந்திப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. If he is a Tamil or Muslim...then will be named as LTTE & ISIS..? by vejdhasa rajapaksa...!!!

    ReplyDelete
  2. Very good comedy president.Really super we got this man our country as a leader.Past two years mush developtment economics.

    ReplyDelete
  3. முஸ்லிம்களின் மனதிற்குள் ஆலமாக ஊடுருவி தாக்கிக்கொண்டிருக்கும் இனவாதிகளின் செயற்பாடுகளுக்கும் பரிசு கொடுப்பீங்களா?

    ReplyDelete

Powered by Blogger.