Header Ads



9 ஆண்டுகளில் 18 பில்லியன் ரூபா நட்டம்


மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட மிகின்லங்கா விமான சேவை, ஒன்பது ஆண்டுகளில் 18 பில்லியன் ரூபா இழப்பைச் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த விமான சேவை ஒருபோதும் இலாபத்தை ஈட்டவில்லை என்றும், கடந்த மார்ச் 31ஆம் நாள் வரையில், 17.27 பில்லியன் ரூபா நட்டத்தையை சந்தித்திருப்பதாகவும் அதிகாரபூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான மிகின் லங்கா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கடந்த 9 ஆண்டுகால நிதி செயற்பாடுகள் குறித்து விபரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2006-07 காலப்பகுதியில், 195 மில்லியன் ரூபாவையும், 2007-08 காலப்பகுதியில் 3161 மில்லியன் ரூபாவையும், 2008 -2009 காலப்பகுதியில்1300 மில்லியன் ரூபாவையும், 2009-10 காலப்பகுதியில், 1221 மில்லியன் ரூபாவையும், 2010-11 காலப்பகுதியில் 940 மில்லியன் ரூபாவையும், 2011-12 காலப்பகுதியில், 1968 மில்லியன் ரூபாவையும், 2012-13 காலப்பகுதியில், 3293 மில்லியன் ரூபாவையும், 2013-14 காலப்பகுதியில் 2592 மில்லியன் ரூபாவையும், 2014-15 காலப்பகுதியில் 1406 மில்லியன் ரூபாவையும், 2015-16 காலப்பகுதியில் 1196 மில்லியன் ரூபாவையும் மிகின்லங்கா விமான நிறுவனம் இழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர் நட்டத்தை அடைந்து வந்த மிகின் லங்கா நிறுவனத்தின் அனைத்து விமான சேவைகளும், கடந்த ஒக்ரோபர் 31ஆம் நாளுடன் நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.