Header Ads



4 வயது குழந்தையை கற்பழித்துகொன்ற கொடூரன் - சிறையை உடைத்து தூக்கிலிட்ட மக்கள்


பொலிவியாவில் 4 வயது குழந்தையை கற்பழித்து கொன்ற குற்றவாளியை ஊர் மக்கள் சிறையை உடைத்து தூக்கிலிட்டு கொன்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர வைத்துள்ளது.

பாட்டியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் சென்ற 4 வயது குழந்தை Reyes பகுதியில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து விசாரணை நடத்திய பொலிசார் குழந்தை கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டதை உறுதி செய்தனர்.

பின்னர் சில மணிநேரங்களிலே சந்தேகத்தின் பேரில் குற்றவாளி ஒருவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இச்செய்தியை அறிந்து கடும் கோபத்தில் இருந்த ஊர் மக்கள், அதிரடியாக சிறைக்குள் நுழைந்து சிறையை கதவுகளை உடைத்து குற்றவாளியை அடித்துள்ளனர்.

பின்னர், நடுவீதியில் வைத்து குற்றவாளியை மரத்தில் தூக்கிலிட்டு கொன்றுள்ளனர். இதை பொலிசார் தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர்.

தற்போது, குழந்தை மற்றும் குற்றவாளி உடலை கைப்பற்றியுள்ள பொலிசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

4 comments:

  1. Replies
    1. Good Job ? அவர் சந்தேகத்தின் பேரில் கைதானவர். உண்மையான குற்றவாளி அவராக இருந்தால் கண்டிப்பாக Good Job, ஆனால் இங்கு நிலைமை வேறு.

      Delete
    2. Mohamed jawzan பாவத்துக்கு வக்காலத்து வாங்க வேண்டாம் ,அவன் உண்மையான குற்றவாளியாக இருந்தாலும்தண்டனை கொடுப்பது அரசுடைய வேலை.இவானை இவர்கள் கொன்றதால் இவனின் குடும்பம் இதில் சம்மந்தப்பட்டவர்களை பழி வாங்கும் இவ்வாறு தொடர்ந்து கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கும் .உருமை இல்லாததை கையில் எடுக்க யாருக்கும் அனுமதி இல்லை.நாம் எழுதும் கருத்தால் இது செரிதான் என்ற முடிவை ஒரே ஒருவன் எடுத்தால் அதுவே போதும் நம்மை நரகில் கொண்டு சேர்க்க

      Delete

Powered by Blogger.