Header Ads



மைத்திரிக்கு இந்தியா ஆதரவு, இராணுவ புரட்சி வெடித்தால் 2 கப்பல்களை அனுப்புமாம்..!

சிறிலங்காவில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுவதை இந்தியா சகித்துக் கொள்ளாது, எத்தகைய இராணுவப் புரட்சி முயற்சிகளையும் முறியடிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியா முழு ஆதரவையும் அளிக்கும் என்று சிறிலங்கா அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.

நெத் எவ்எம் வானொலிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே, அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க, இவ்வாறு கூறியுள்ளார்.

“சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்தியாவுடன் நல்லுறவை பேணி வருகிறார். சிறிலங்காவில் இராணுவப் புரட்சி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அதனை முறியடிக்க இந்தியா உதவும்.

சிறிலங்கா அதிபருக்கு இந்தியாவின் ஆதரவு உள்ளது. சிறிலங்கா அரசுக்கு உதவியாக இந்தியா இரண்டு கப்பல்களை அனுப்பும்.

சிறிலங்காவில் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை புதுடெல்லி சகித்துக் கொள்ளாது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

8 comments:

  1. Andha kappalla annanda koottamum warattum

    ReplyDelete
  2. இந்தியாவின் ஆசிர் வாதத்தோடு எல்லாம் செய்வதால்தான் எவ்வ்லாவு பிரச்சினை நாட்டில்.இலங்கையில் நடக்குமனைத்து மதவாதப்பிரச்சினைக்கும் காரணம் இந்தியாதான்.

    ReplyDelete
  3. மோடியின் சேவை இலங்கைக்கு தேவை

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக அப்பதான் தமிழ் யுவதிகளை இந்திய இராணுவம் ரேப் செய்ததை மீண்டும் தொடரலாம்...

      Delete
    2. @imran hahaha Tamil hindu yuvathihalai kolvathuthaane ivarathum ivarathu thalaivar v... pillai inathum kurikkol, Christian Tamils settled in Europe , Canada and US.

      Delete
    3. Crocodile cry from Muslims :-)

      Delete
  4. நடக்காத ஒன்றை பற்றி தான் இவர் கதைப்பார் 1987-1989 பாடம் படிக்க வில்லை.

    ReplyDelete
  5. துவேசத்தின் தந்தை தான் மோடி....

    ReplyDelete

Powered by Blogger.