Header Ads



கல்ஹின்னயில் முஸ்லிம் இளைஞன் சுட்டுக்கொலை - 2 வது சந்தேக நபர் கைது


கண்டி - அங்கும்புற பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்ஹின்ன, பெபிலகொல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் 23 வயதுடையவர் என்பதுடன், குறித்த நபர் ரணல பகுதியைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரை இன்று கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், இன்று குறித்த நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கல்ஹின்ன, பெபிலகொல்ல பகுதியில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச்சூட்டில்  ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.