Header Ads



இலங்கையில் தினமும் 1200 சிசுக்கள் பிறப்பு - 800 கருகலைப்பு கொலைச் சம்பவங்கள்

இலங்கையில் நாளொன்றுக்கு, 1100-1200 வரையில் சிசுக்கள் பிறக்கும் அதேவேளையில், 700-800 வரையிலான கருகலைப்புச் சம்பவங்களும் இடம்பெறுவதாக, தென் மாகாண சுகாதார திணைக்களத்தின் தொற்றுநோய் பிரிவுக்கான வைத்தியர், நளனி விஜேசேகர தெரிவித்துள்ளார். 

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 

“இலங்கையில் கருகலைப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நாளொன்றுக்கு 1000-1,200 வரையில் சிசுக்கள் பிறந்தாலும் 800 இற்கும் மேற்பட்ட கருகலைப்புச் சம்பவங்கள் இடம்பெறவேச் சென்கின்றன. யார் எதை கூறினாலும், கரு கலைப்பு என்பது ஒரு கொலை இடம்பெறுவதற்கு சமனானது. அதுமட்டுமல்ல, நகரீகமற்றச் செயலும்கூட.  ஓர் உயிரையே நாம் கொலைசெய்கின்றோம்”  என அவர் மேலும் கூறினார்.

No comments

Powered by Blogger.