Header Ads



குருநாகல், கண்டி, அக்கறைப்பற்று, காத்தான்குடியில் NM Travels நிறுவனத்தின் பிராந்திய கிளைகள்


இலங்கையில் NM Travels நிறுவனத்தின் பிராந்தியக் கிளை ஒன்று, குருநாகலில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் ஸ்த்தாபகத் தலைவர் MSH மொஹமட் இந்த பிராந்திய கிளையை 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

இதுபோன்று எதிர்வரும் 21 ஆம் திகதி கண்டியிலும், 28 ஆம் தகிதி அக்கறைப்பற்றிலும், 29 ஆம் திகதி காத்தான்குடியிலும் புதிய கிளைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் கிண்ணியா, திருகோணமலை, புத்தளம், அநுராதபுரம், களுத்துறை ஆகிய பிரதேசங்களிலும் இவ்வருட இறுதிக்குள் தமது நிறுவனத்தின் புதிய கிளைகள் ஆரம்பித்து வைக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

தனதும், தனது நிறுவனத்தினதும் நோக்கம், தரமானதும், சிறந்த சேவையினை நாட்டு முஸ்லிம்களுக்கு வழங்குவதே எனவும், இலாப நோக்கம் அல்ல எனவும் சுட்டிக்காட்டினார்.

அதனால்தான் தமது நிறுவனம் ஹஜ், உம்றா செல்லும் முஸ்லிம்களிடமிருந்து நியாயமான கட்டணத்தை அறிவிடுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் 2000 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை தாம் ஹஜ், உம்றாவுக்காக 30000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களை அனுப்பிவைத்துள்ளதாகவும் தெரிவித்ததுடன், கதீப், மௌலவி, ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள், இராணுவ, கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸார் என 500 க்கும் மேறபட்டவர்களை இவசமாக ஹஜ், உம்றா கடமைக்காக அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமது நிறுவனம் மற்றும் சேவைகள் குறித்தும் தம்முடன் நேரடியாக தொடர்புகொண்டு உரையாட முடியும் எனவும் NM Travels நிறுவனத்தின் தலைவர் MSH மொஹமட் குறிப்பிட்டார். 

தொலைபேசி இல. 0712799648

No comments

Powered by Blogger.