Header Ads



Mp க்கு சொந்தமான 400 ஏக்கர் தோட்டத்தில், ஜனாதிபதி வாகனங்களைத் தேடி சோதனை

நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட சோதனை உத்தரவுக்கு அமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர்கள் 50 பேர், மத்துகம பெலிஸ்டர் தோட்டத்தில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குமார வெல்கமவுக்கு சொந்தமான சுமார் 400 ஏக்கர் பரப்பளவிலான தோட்டத்திலேயே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான டிபென்டர் வாகனங்கள் இரண்டைத் தேடி, இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், இந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.