மைத்திரிபால சிறிசேனவினால் வெற்றிபெற முடியாது - கூட்டு எதிர்க்கட்சி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் பணியாற்ற தயாராக இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் முன்வைக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒப்புதலும் கிடைத்தது.
இதனால், நாட்டை கட்டியெழுப்ப அந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியும்.
பிரதமர் உட்பட அமைச்சரவை ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்பட்டு வருவதால், 2017ஆம் ஆண்டுக்குள் நாட்டில் வறுமையை ஒழிக்கும் சவாலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெற்றிப் பெற முடியாது எனவும் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
Post a Comment