Header Ads



தொலைக்காட்சி நிகழ்வில் கீதாவுடன், மஹிந்தவின் கடைசி மகன் மோதல்


இலங்கையின் பிரபல தனியார் தொலைக்காட்சியில் இடம்பெறவுள்ள போட்டி நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

எனினும் தொலைக்காட்சி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ரோஹித ராஜபக்ஷ அந்த போட்டி நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியில் போட்டியிடவிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், நடிகை கீதா குமாரசிங்கவுடனான வாய்தகராறு காரணத்தினாலே இவ்வாறு அவர் விலகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வெளியாகிய தகவல்களுக்கமைய கீதா குமாரசிங்க மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகிய இருவரும் ஒரே அணியில் போட்டியிட தயாராக இருந்தனர்.

இந்நிலையில் அந்த குழுவின் தலைவராக தான் செயற்படுவதாக ரோஹித ராஜபக்ச குறித்த தொலைக்காட்சி நிர்வாகத்திடம் அறிவித்ததனை தொடர்ந்து இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன் பின்னர் தொலைக்காட்சி நிறுவனத்தினால் கீதா குமாரசிங்கவிடம் இந்த மோதல் தொடர்பில் வினவிய போது, அவர் தனது அதிருப்தியை வெளியிட்டதோடு தான் பிரபல நடிகை எனவும், அதிகாரத்தை இழந்த அரசியல் குடும்பத்தின் சிறிய பையனின் கீழ் செயற்பட முடியாதென அறிவித்துள்ளார்.

இது குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம் ரோஹிதவுக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில் தான் இந்த போட்டியில் இருந்து விலகுவதாக ரோஹித அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எப்படியிருப்பினும் அண்மையில் கீதா குமாரசிங்க மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகிய இருவரும் இணைந்து போட்டி நிகழ்ச்சி தொடர்பில் கருத்து வெளியிட்ட காணொளி ஒன்றும் தற்போதும் வரையில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.