Header Ads



அரசியல்வாதி டாக்டர் சுதர்­ஷனியின் முன்மாதிரி - நீர்கொழும்பில் சம்பவம்

(எஸ்.கே)

நீர்­கொ­ழும்பு, கல்­கந்த சந்­தியில் பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒருவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்­கிளும், மற்­றொரு வாக­னமும் மோதி விபத்­துக்­குள்­ளா­னதில் அந்த பொலிஸ் கான்ஸ்­டபிள் பலத்த காய­ம­டைந்த நிலையில் வீதியல் காணப்­பட்­ட­தை­ய­டுத்து  ராஜாங்க அமைச்சர் சுதர்­ஷனி பெர்­ணான்டோ புள்ளே தனது உத்­தி­யோ­க­பூர்வ வாக­னத்தில் குறித்த பொலிஸ் கான்ஸ்­ட­பிளை  வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைத்­துள்ளார்.

விபத்து நடந்த சந்­தர்ப்­பத்தில், படு­கா­ய­முற்ற பொலிஸ் கான்ஸ்­ட­பிளை வைத்­தி­ய­சா­லைக்கு கொண்­டு­செல்ல வாக­ன­மொன்று கிடைக்­காத நிலை­யி­லேயே அவர் தனது வாக­னத்தை கொடுத்து விட்டு  வீதியில் வந்த முச்­சக்­கர வண்டி ஒன்றில் ஏறி வைபவம் ஒன்றில் கலந்து கொள்ளச் சென்­றுள்ளார்.

நீர்­கொ­ழும்பு 50 ஏக்கர் பிர­தே­சத்தில் பல அபி­வி­ருத்தி திட்­டங்­களை அங்­கு­ரார்ப்­பணம் செய்து வைக்கும் வைப­வத்தில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளச் சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

No comments

Powered by Blogger.