பதுளையில் மழையை தேடித் தொழுகை - ஜம்இய்யதுல் உலமா ஏற்பாடு
நாட்டில் தற்போது நிலவிவரும் கடுமையான வரட்சி நிலைமையினைக் கருத்திற் கொண்டு ஜம்இய்யதுல் உலமா பதுளைக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ஸலாதுல் இஸ்திஸ்கா” மழை தேடித் தொழும் தொழுகை இன்ஷா அல்லாஹ் நாளை 12/10/2016 புதன்கிழமை காலை 6.30 தொடக்கம் 7.00 மணி வரை பதுளுபிட்டிய முஜாஹிதீன் பள்ளிவாசலுக்கு அருகாமையிலுள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொழுகையில் அனைத்துப் பொது மக்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளும் துண்டுப் பிரசுரமொன்றை பதுளை ஜம்இய்யதுல் உலமா வெளியிட்டுள்ளதுடன் சமூக ஊடகங்களிலும் இது தொடர்பான அறிவிப்புக்களை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-எம். ஏ.சி.எம். முனவ்வர்,
Post a Comment