Header Ads



நாட்டு மக்களுக்கு நான் அச்சுறுத்தல் என, கருதினால் அது கவலைக்குரியது - கோத்தபாய

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்த காலத்தில் அரசியல்வாதிகள் செல்லும் இடங்கள் பற்றி தகவல்களை தேடுமாறு தான் அரச புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதில்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதிகள் சம்பந்தமாக தேடுமாறே தாம் அவர்களுக்கு உத்தரவிட்டிருந்தாகவும் அவர் கூறியுள்ளார்.

மாத்தறையில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே கோத்தபாய ராஜபக்ச இதனை குறிப்பிடடுள்ளார்.

நாட்டுக்கும் மக்களுக்கும் தான் அச்சுறுத்தல் என அவர்கள் கருதினால், அது கவலைக்குரியது எனவும் அவர் கூறியுள்ளார்.

தான் செல்லும் இடங்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் தேட முயற்சிப்பார்கள் என்றால், அதற்கு காலத்தை செலவிட தேவையில்லை எனவும், தனது நாளாந்த நிகழ்ச்சி நிரலை அவர்களுக்கு வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இவனையோ அல்லது இவனது குடும்பத்தையோ எதிர்கால இலங்கை அரசியலுக்குப் பக்கத்தில்கூட அனுமதிக்க வேண்டாம் என இந்நாட்டு மக்கள் சார்பாக வேண்டிக் கொள்கின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.