Header Ads



என்னை விடவும், ஓர் திருடர் உள்ளார் - நாமல்

என்னைக் கைது செய்ய வந்தவர் என்னை விடவும் ஓர் திருடர் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை மைத்திரிகம பிரதேசத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  அவர் மேலும் கூறுகையில்,

நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது மட்டுமல்லாது மேலும் வழக்குகள் தொடரப்படும்.

என்னைக் கைது செய்ய வந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொலை வழக்கு ஒன்றில் தொடர்புபட்டு பிணையில் விடுதலையானவராவார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே அவருக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

எனவே என்னைக் கைது செய்ய வந்தவர் என்னை விடவும் திருடர் என்பது புலனாகின்றது.
நாட்டில் இடம்பெற்ற கொலைகளில் 71 வீதமானவை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் கூறியிருந்தார்.

அவ்வாறு என்றால் பொலிஸ் திணைக்களத்தில் உள்ள கள்வர்களையும் கண்டு பிடிக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. திருடர்களை உரமூட்டி வளர்த்தவர்கள் யாரோ?
    கவலை கொள்ளத் தேவையில்லை விசாரிப்பதுடன்
    உங்கள் caseகளை முடித்து விடுவர்!

    ReplyDelete
  2. நாமல் தான் ஒரு திருடன் என்பதை ஒப்புக் கொன்றுள்ளார்

    ReplyDelete
  3. So you agree that you are a thief.!

    ReplyDelete
  4. என்னை விடவும் பெரிய திருடன்!!!!!!!! ஆக நானும் திருடன்தான் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்கள்.இந்த வாக்குமூலம் போதுமே இவருடைய வலக்கை முடிப்பதற்கு?

    ReplyDelete
  5. குடும்பமே திருட்டுக் கும்பல்.

    இவன் - தன்னைத்தானே சிபாரிசு வேறு.

    கொசுத்தொல்லை தாங்க முடியலை.

    ReplyDelete

Powered by Blogger.