ஈரானுக்கு வரும்படி மைத்திரிக்கு அழைப்பு - இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தவும் இணக்கம்
நீண்டகால வரலாற்றைக் கொண்ட ஈரான் – இலங்கை உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு இரு நாட்டு தலைவர்களும் உறுதியளித்துள்ளனர்.
தாய்லாந்திற்கு நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்று ஈரானிய ஜனாதிபதி கலாநிதி ஹசன் ருஹானி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று -10- மதியம் பாங்கொக் நகரில் இடம்பெற்றது.
இருநாட்டு உறவுகளையும் மேலும் பலப்படுத்துவதற்கு இச்சந்திப்பு பெரும் உந்துசக்தியாகுமென்று கூறிய ஈரானிய ஜனாதிபதி, விரைவில் ஈரானுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு அழைப்பு விடுத்தார்.
ஈரான் இலங்கைக்கு எண்ணெய் வழங்குவதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பினை செய்வதுடன் எதிர்காலத்தில் அச் செயற்பாடுகள் மேலும் சீரடையும் என்று கூறிய ஈரான் ஜனாதிபதி இரு நாடுகளுக்குமிடையிலான ஏற்றுமதி, இறக்குமதி செயற்பாடுகளுக்கு புதிய வாய்ப்புகள் வழங்கப்படுமென்றும் கூறினார்.
அத்துடன் இருநாடுகளுக்குமிடையில் இருதரப்பு கொள்வனவுகளை அதிகரிப்பதற்கு அச்சந்திப்பின் போது ஈரானிய ஜனாதிபதி யோசனை வெளியிட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஈரானும் இலங்கையும் உள்நாட்டு முரண்பாடுகள் தொடர்பில் சிறந்த புரிந்துணர்வுடன் செயற்படுகிறது.
இலங்கையின் உமாஓயா அபிவிருத்தித் திட்டத்துக்காக ஈரானிய அரசு வழங்கும் உதவிகள் தொடர்பில் நன்றி தெரிவித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஏற்றுமதி, இறக்குமதி செயற்பாடுகளிலும் அபிவிருத்தித் துறையிலும் ஈரானும் இலங்கையும் ஒத்துழைப்புடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் மாநாட்டுடன் இலங்கை , ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகள் மேலும் பலப்படுமென கூறிய ஈரானிய ஜனாதிபதி இந்த மாநாடு இரண்டு நாடுகளுக்கும் மட்டுமன்றி ஆசிய வலயத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கும் முக்கியமானதெனவும் கூறினார்.
இனியென்ன?
ReplyDeleteஷியாக்கூட்டங்கள் நாடு முழுவதும் தலை விரித்தாடும்.
மூதேவிக் கூட்டங்கள்.