Header Ads



முடிந்தால் புதிய கட்சியை, ஆரம்பித்து காட்டுமாறு சவால்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுப்படுத்தி புதிய கட்சியை ஆரம்பிக்க போவதாக தற்பெருமை பேசுவோர் முடிந்தால், புதிய கட்சியை ஆரம்பித்து பதவிகளை பெற்று காட்டுமாறு சவால் விடுப்பதாக சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

ஒரு சிறிய தரப்பினர் கட்சிக்குள் இருந்து கொண்டு கட்சியின் தலைமைத்துவத்தை விமர்சித்து கட்சியை பிளவுப்படுத்தும் ஒப்பந்தத்தை பொறுப்பேற்றுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது வரலாற்றில் இப்படியான பல சவால்களை எதிர்கொண்டுள்ளது.

அப்படியான பின்னணியில் இரண்டு மூன்று பேரால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சவாலை ஏற்படுத்த முடியாது.

புதிய கட்சியை ஆரம்பிக்க போவதாக இந்த இரண்டு, மூன்று பேர் கட்சியினரை தவறாக வழிநடத்தி வருகின்றனர்.

முடிந்தால் புதிய கட்சியை ஆரம்பித்து காட்டுமாறு சவால் விடுப்பதாகவும் சாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.