Header Ads



கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல் முன், மஹிந்த தரப்பு ஆர்ப்பாட்டத்தில் கூச்சல்

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஜெருஸலேமில் அமைந்துள்ள அல் அக்ஸா பள்ளிவாசல் பலஸ்தீனுக்கு சொந்தமானது என தெரிவித்து யுனெஸ்கோ மாநாட்டில் பலஸ்தீ்ன் கொண்டுவந்த பிரேரணைக்கு அரசாங்கம் ஆதரவாக வாக்களிக்காமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு    இன்று வெள்ளிக்கிழமை ஜுமாஆ தொழுகைக்கு பின்னர் இருவேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. 

முஸ்லிம் முற்போக்கு முன்னணி ஏற்பாடுசெய்திருந்த ஆர்ப்பாட்டம் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலுக்கு முன்னால் இடம்பெற்றது. இதில் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம்.அஸவர், குருநாகல் மாநகரசபை முன்னாள் உறுப்பினரும் முன்னணியின் தலைவருமான அத்துல் ஸத்தார் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

முஸ்லிம் முற்போக்கு முன்னணியினர் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலுக்கு முன்னால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது அவர்கள் அரசாங்கத்துக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவண்னம் நல்லாட்சி என்னாச்சி, அரசாங்கத்துக்கு வாக்களித்தமைக்கு அரசாங்கம் முஸ்லிம்களுக்கு  கொடுத்த பரிசுதான் பலஸ்தீனுக்கு எதிராக நின்றமை, முஸ்லிம்களின் எதிரி இஸ்ரேலுக்கு மைத்திரி ரணில் மங்கள நண்பர்கள், முஸ்லிம் அமைச்சர்களே ஏன் இன்னும் மௌனம், அமெரிக்காவே நாட்டில் இருந்து வெளியேறு. ஜனாதிபதியே மங்களவை பதவி நீக்கு போன்ற கோஷங்களை எழுப்பினர்.

இதேவேளை, முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தலைவர் ஏ.எச்.எம். அஸ்வர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தொழுகைக்கு வந்திருந்த சிலர் பாதையின் ஒரு பகுதியில் குழுமியிருந்து ஹூ குரல் இட்டதுடன் மஹிந்தவுக்கு சோரம் போகாதே, முஸ்லிம்களை காட்டிக்கொடுக்காதே என கூச்சலிட்டனர். இவ்வாறு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை அவசரமாக முடித்துக்கொண்டு கலைந்து சென்றனர்.

2 comments:

  1. Andru mahinda arasaga kalattil ematu pallihalukku adikkum potu muslimgal than pallihalukku adiththu vittu matru mataththawar mail paliyay poduhirarhal endru sonna KURUNEGALA SATHTHAR MENTLE ASWER IPPODU AEN MUSLIMGAL PINNAL.sonnatu marakka willai.. electionla taruwom 2perukkum aappu insha allah.

    ReplyDelete

Powered by Blogger.