Header Ads



அரசாங்கம் கவிழ்ந்து விடும் என, ராஜபக்ச தரப்பு ஊடகங்கள் பிரச்சாரம் - ஜனாதிபதி

நேற்று இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸின் இராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வதா..? இல்லையா..? என்பது தொடர்பில் பிரதமரின் வருகையின் பின்னர் தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி இன்று -18- இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தமையினால் அரசாங்கம் இன்று அல்லது நாளை கவிழ்ந்து விடும் என ராஜபக்ச தரப்பு ஊடகங்கள் மேற்கொண்ட பிரச்சாரங்களை பார்க்கும் போது அவர்கள் எந்த அளவிற்கு வங்குரோத்து அரசியலில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது நாட்டிற்கு தெளிவாகியுள்ளதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.