Header Ads



மட்டக்குளி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு 'குடு ரொஷான்' கைது

கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) கொழும்பு 15, மட்டக்குளிய, சமித்திபுரவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பாதாள கோஷ்டி தலைவன் 'சூட்டி உக்குவா' உள்ளிட்ட நால்வர் கொல்லப்பட்டிருந்ததோடு மேலும் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளை அடுத்து நேற்று (24) பிற்பகல் குறித்த 11 பேரையும் கைது செய்துள்ளதாக கொழும்பு குற்ற தடுப்பு பொலிஸ் பிரிவினர் தெரிவித்தனர்.

இரத்தினபுரி பிரதேசத்தில் மறைந்திருந்த குறித்த நபர்களிடமிருந்து ரி56 வகை துப்பாக்கி ஒன்றும் இரு கைத்துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த இரு கும்பல்களுக்கிடையே இதற்கு முன்னர் இடம்பெற்ற இரு கொலைச் சம்பவங்களே, இச்சம்பவத்திற்கான காரணமாம் என கொழும்பு பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

1 comment:

  1. Only the Islamic law has the prowess to curb all crimes and immoral acts.

    ReplyDelete

Powered by Blogger.